தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ந்தேதி வரை (நாளை) மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும். டெல்டா மாவட்டங்கள் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தீபாவளியன்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் மையம் தெரிவித்து உள்ளது.
கனமழை எதிரொலியாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மயிலாடுதுறை உள்பட 8 மாவட்டங்கள் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. எனினும், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபற்றி கடலூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொடைக்கானலில் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. எனினும், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபற்றி கடலூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூரில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று விழுப்புரத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments