சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தாலும், வருகிற 10-ந்தேதி வரை பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments