ரமணமகரிஷி (25)
ரமணமகரிஷி (25)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 25
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்த தொடர்: 25
பாலரமணராய் இருக்கும் காலத்தில், அவரிடம் அன்பை வைத்திருந்தவர்களில் டி. பி ராமச்சந்திரய்யா அவர்களின் பாட்டனாரும் ஒருவர்.ஒரு முறை ரமணரை தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். அவரின் கனிவான வேண்டுதலை ஏற்று, நான் இதுவரைக்கும் யார் வீட்டிலும் விருந்துக்கு சென்றதில்லை. இனிமேலும் யார் வீட்டிற்கும் செல்லப் போவதுமில்லை என்று மனம் நெகிழ்ந்து பேசி, அவர் வீட்டிற்கு மட்டும் விருந்துக்குச் சென்றார்.
திருவண்ணாமலையில் காலடி வைத்த பிறகு பகவான் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றதுண்டு என்றால் அது டி. பி. ராமச்சந்திரய்யா அவருடைய வீட்டுக்கு மட்டும் தான்.
பகவான் ஸ்ரீரமணர் விட வயதில் மூத்த சீடர் என்றார் அவரே ராமசுவாமி ஐயர் என்பவர்.
இராமசுவாமி பிள்ளை என்று இன்னொருவர்.1911ல் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நேராக ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டார். பகவான் ஒரு சமயம் மலைப்பக்கம் உலவச் சென்ற போது கல் இடித்து காயம் ஏற்பட்டது. அதனைக் கண்ட இராமசுவாமி பிள்ளை மறுநாளே நேர்த்தியான முறையில் படிக்கட்டு கட்டத் தொடங்கினார். தனியாக இரவு பகலாக வேலை செய்து அந்த காரியத்தை முடித்தார். ராமசாமிப் பிள்ளை அவர்களின் செயல் கண்டு பகவான் ஸ்ரீரமணர் பெருமிதம் கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர் தாயகம் திரும்பப் போகும் வேளையில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது தவித்தார். ஏன் அழுகிறாய் என்று பகவான் வினவிய போது, உங்களை விட்டுப் போவதற்கான மனம் இல்லாததால், கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வருகிறது என்று கூறினார்.
பகவான் அந்த அம்மையாருக்கு ஆறுதல் கூறினார், நீ எங்கு போனாலும் நான் உன் நினைவில் வந்து கொண்டு இருப்பேன். எதற்கும் நீ வருத்தப்படாதே என்று கூறிய பிறகு புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அந்த அம்மையார் மிகவும் மகிழ்ந்தபடி சொந்த ஊருக்குச் சென்றார்.
பகவானிடம் நிறைய பேசுகிற வாய்ப்பைப் பெற்றவர்கள் தேவராஜ் என்பவரும் ஒருவர்.தன் மீது அன்பு செலுத்தும் யாரிடமும் அவர் உள்ளத்தில் மிக எளிதாக குடிகொண்டு விடுவார்.
ஒருமுறை அவரைப் பார்க்க வந்த ஒருவர், புலித்தோல் ஒன்றை எடுத்து வந்து இதை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கொடுத்தார். அவர் விருப்பத்திற்கு இணங்கி பெற்றுக்கொண்டார்.
சில நாட்கள் கழித்து இன்னொருவர் வந்து, சாதுக்கள் ஆகிய நீங்கள் புலித்தோலை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்றார். சொன்ன அவரிடமே அந்த புலித்தோலை அளித்தார்.
எதன் மீதும் பற்று இல்லாதவர் பகவான் ஸ்ரீ ரமணர் அல்லவா.
பகவானை பல நிலைகளில் புகைப்படம் எடுக்கிற வாய்ப்புக் கிடைச்சது சென்னையை சேர்ந்த டாக்டர் டி.என். கிருஷ்ணன் என்பவராவார்.
சுத்தானந்த பாரதி, டி.வி. நரசிம்மசுவாமி வேங்கடராமையா, சூரநாகம்மா, அம்பரீஷ். குஞ்சு சுவாமிகள், சாது ஓம் போன்றவர்கள் பகவானுடன் தங்கி நூல்கள் இயற்றிய துண்டு.
இவர்களன்றி பகவானுக்கு பணிவிடை செய்வதே தங்கள் பேறாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பலர்.
மாதவ சுவாமியும், கிருஷ்ணசாமியும், அந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.அவர்கள் பகவானின் திருவடி தொட்டு வணங்கி பல்வேறு பணிகளை மேற்கொண்டனர் உழவாரப்பணி செய்தல், நந்தவனம் அமைத்தல் நிழல்தரும் மரங்கள் நடுதல் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
பகவான் ஸ்ரீ ரமணர், தன்னை நாடி வருபவர்களிடம் உள்ளார்ந்த அன்பை வைத்திருந்தார், ஆகையால் தான் பலதரப்பட்ட மக்கள் ஆசிரமங்களில் வந்து ஆசி பெற்று புளகாங்கிதம் அடைந்தனர்.
மக்களிடம் மட்டுமல்ல. சில விலங்குகளிடம் ஸ்ரீரமணர் நேசம் கொண்டிருந்தார். அதன் விவரம் நாளைய பதிவில்.
Comments