கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28 - 29
கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28 - 29 ஆம் தேதிகளில் 4 மாநிலங்களில் நடைபெறும்
கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை டிசம்பர் 28, 29 அன்று அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறுகிறது.
தடுப்பூசி போடுவதற்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்வது, திட்டமிட்ட நடவடிக்கைகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அசாம், குஜராத், ஆந்திரா மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குடும்ப நலன் மற்றும் சுகாதார அமைச்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவுது:-
கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் திட்டமிடப்படும். இந்த இரண்டு நாள் செயல்பாடு 2020 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான குளிர் சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், சரியான சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும் .
இந்த ஒத்திகை நடவடிக்கை என்பது கொரோனா தடுப்பூசி போட்டத்தும் ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதை மையமாக கொண்டிருக்கும் . கூடுதலாக, நோய் பரவுவதைத் தடுக்க, தடுப்பூசி போடக்கூடிய இடங்களில் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் நிர்வகித்தல். ஒத்திகை பயிற்சியில் தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் ஒரே நேரத்தில் கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு ஆகியவை அடங்கும், மேலும் மாநில மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய கருத்துக்களைத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க வசதியாக, தேசிய அளவில் 1075 மற்றும் மாநில அளவில் 104 உதவி எண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தேசிய அளவிலான பயிற்சியில், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 2,360 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது வரை, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாநில அளவிலான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் மாவட்ட அளவில் 7,000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர். லட்சத்தீவில் இந்த பயிற்சி டிசம்பர் 29ஆம் தேதி நடக்கிறது. 681 மாவட்டங்கள் (49,604 பயிற்சியாளர்கள்) செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் மருத்துவ அதிகாரிகளின் பயிற்சியை முடித்துள்ளன. 17,831 வட்டாரங்களில் 1399 வட்டாரங்களில், தடுப்பூசி போடும் குழுவினருக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் பயிற்சிகள் நடந்து வருகின்றன
Comments