தீபாவளி ஸ்பெஷல்: இனிப்பு சீடை
தீபாவளி ஸ்பெஷல்: இனிப்பு சீடை
இனிப்பு சீடை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 1/2 கப்
பச்சரிசி - 1 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
கருப்பு வெல்லம் - 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்
எண்ணெய் - வறுக்க
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்ததும் ஜல்லடையில் மாவை போட்டு ஜலித்து கொள்ளவும்.
வெல்லத்தை கடாயில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் வெல்லம் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.
அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும். எள்ளை மாவில் கலந்துகொள்ளவும்.
அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.
ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.
சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன்தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெயை கடாயில் ஊற்றி நன்கு காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில சமயத்தில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாளுங்கள்.
கருப்பு வெல்லம் - 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்
எண்ணெய் - வறுக்க
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்ததும் ஜல்லடையில் மாவை போட்டு ஜலித்து கொள்ளவும்.
வெல்லத்தை கடாயில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் வெல்லம் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.
அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும். எள்ளை மாவில் கலந்துகொள்ளவும்.
அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.
ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.
சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன்தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெயை கடாயில் ஊற்றி நன்கு காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில சமயத்தில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாளுங்கள்.
சூப்பரான இனிப்பு சீடை ரெடி.
Comments