சூரரைப்போற்று -சினிமா விமர்சனம்
சூரரைப்போற்று -சினிமா விமர்சனம்
இந்தியாவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் முன்னேறியதற்கு முக்கியக்காரணமே போக்குவரத்தில் அதன் உள் கட்டமைப்புகள் தான். தமிழகம், கேரளா உடபட பல மாநிலங்களில் கிராமங்களில் கூட மினி பஸ் வசதி உண்டு .
அது சின்ன ஊருப்பா , அங்க ஸ்டாப்பிங் லாம் கிடையாது என சொல்லப்படும் பல கிராமங்களில் பஸ்ஸை ரயிலை மனு அளித்து போராட்டம் செய்து நிற்க வைத்தவர் அப்பா .
அவரது மகன் கொஞ்சம் அதிகமா சிந்திச்சு பணக்காரர்கள் மட்டுமே செல்லும் விமானத்தில் சாமான்ய மக்கள் , சராசரி நடுத்தர குடும்பங்கள் பயணிக்கனும் என கனவு காணும் ஒரு இளைஞனின் சுயசரிதைதான் இந்த படம்.
விமான சேவையில் எளிமை புரட்சியைக்கொண்டு வந்த ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப்படம் .
தமிழ் சினிமாவில் பயோ பிக்சர்கள் வருவது மிகக்குறைவு , வந்தாலும் கமர்ஷியலா போகாது .
அந்த நியதியை இந்த படம் உடைத்திருக்கிறது .
கூடவே தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல்
ஓ டி டி தளத்தில் ரிலீஸ் ஆகி மக்களின் ஆதரவைப்பெற்ற முதல் படம்.
ஹீரோவா சூர்யா
ஆறு பட கெட்டப்பில் பல காட்சிகளில் வருகிறார்.
சமீபகால தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சூர்யாவுக்கு இது போராடிக்கிடைத்த வெற்றி .
படம் முழுக்க இவர் நடிப்பு ராஜ்ஜியம்தான் ,
ஹீரோயினா அபர்ணா பாலமுரளி அருமையான முக பாவனைகள் .
இவரது நடிப்பு பெரிய பிளஸ்
வில்லனாக பரேஷ் குட் ஆக்டிங் , ஹீரோவுக்கு ஹையர் ஆஃபீசராக வரும் மோகன் பாபுவுக்கு இன்னும் சில சீன்கள் வைத்திருக்கலாம் என தோன்றுகிறது.
ஹீரோவின் நண்பனாக வரும் காளி வெங்கட் , ஹீரோயின் சித்தப்பாவாக வரும் கருணாஸ் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள் சிறப்பு .
ஒளிப்பதிவு , எடிட்டிங் அனைத்தும் கனகச்சிதம்
சபாஷ் டைரக்டர்
ஒரு படம் ஹிட் ஆகனும்னா படத்தில் சில காட்சிகளாவது உயிரோட்டமா இருக்கனும், ஏதோ ஒரு இடத்தில் ஆடியன்ஸ் தன்னை படத்தின் ஏதோ ஒரு காட்சியில் கனெக்ட்பண்ணி பார்க்கனும், அப்படி ஒரு அருமையான செண்ட்டிமெண்ட் சீன் படத்தில் இருக்கு .
அப்பாவின் கடைசி காலத்தில் இறக்கும் தருவாயில் மகனால் அங்கே வர முடியாத சூழல் .
பிறகு வந்தவனைப்பார்த்து இப்போ ஏண்டா வந்தே என அம்மா கதற , மகன் கதற மிக உருக்கமான சீன் கண்ணீரை வரவழைத்து விடுகிறது.
நம்மில் பலரும் நம் பெற்றோரில் யாராவது ஒருவர் மரணத்தருவாயில் நம்மால் அருகில் இருக்க முடியலை என்ற வருத்தம் இருக்கும் அந்த சீனில் சூர்யா, ஊர்வசி இருவரின் நடிப்பும் பிரமாதம்.
நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ்.
நமக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைஞ்சா நானும் வாழ்க்கைல ஜெயிப்பேன் என ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் அளவுக்கான கேரக்டர் .
ஓப்பனிங்கில் வில்லன் - ஹீரோ சந்திப்பு அதற்கான ஹீரோ மெனக்கெடல், வில்லனின் ரீயாக்சன் . ரொம்ப பாலிசான சீன் அது
பிரமாதமான கொண்டாட்டப்பாடல்கள் , மற்றும் ஜி வி பிரகாஷின் உயிரோட்டமான பிஜிஎம்
எல்லாவற்றையும் தாண்டி படம் சொல்ல வரும் பாசிட்டிவான மெசேஜ்.
லட்சியத்தை அடைய கடைசி வரை போராடு எனும் ஒன் லைன் நல்லா காட்டி இருக்காங்க
நச்சென்று வசனங்கள் சபாஷ் போட வைக்கிறது .
மாடு பார்க்கப்போற மாதிரி பொண்ணு பார்க்க நான் போகமாட்டேன்னு மாப்ளை சொல்லிட்டாரில்ல? அதான் நானே மாப்ளை பார்க்கப்போறேன்
சீதை மாதிரி சுயம்வரத்துக்கு ரெடி ஆகறயா?
இதுவரை என்னை 20 மாப்ளைங்க ரிஜெக்ட் பண்ணி இருக்காங்கனு ஹிரோயின் ஹூரோ விடம் சொல்வது
சொந்தமா பிஸ்னஸ் பண்ண லோன் கேட்டப்போ இதுவரை 21 பேங்க் மேனேஜர்ஸ் என்னை ரிஜக்ட் பண்ணி இருக்காங்கனு ஹீரோ சொல்வது கெத்து
திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வரும் கையிலே ஆகாசம்
கொண்டு வந்த ஓம்பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா பாடல் அருமை.
அன்பே சூரனின் ஆயுதம். நிலாவைக் காட்டிச் சோறூட்டிய அம்மாக்களின், அம்மாச்சிகளின், அப்பாயிகளின் ஏக்கங்களுக்கு ஏணியமைத்த படக்குழுவினர்க்குப் பாராட்டுகள்
இந்த ஊரைப்பொறுத்தவரை நீ ஒரு கிறுக்கி , நான் ஒரு கிறுக்கன், நம்ம இரண்டு பேருக்கும் வேற இடம் கிடைக்காது , பேசாம நாமே கல்யாணம் பண்ணிக்கலாமா? என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
நேரம் தான் ரொம்ப முக்கியம்னு அடிக்கடி உங்க அப்பா சொல்வாரு, ஆனா அவரோட கடைசி காலத்துல நீ பக்கத்துல இல்லாம போய்ட்டியே? என ஊர்வசி சொல்வார்.
பார்க்க நல்லவன் மாதிரி இருக்கான்.. நிச்சயம் தேற மாட்டான், நாசமா போய்டுவான். பாரு போன்ற வசனங்கள்
உங்களுக்காக சட்டத்தை மாத்த முடியாது
ஆனா பணக்காரங்களுக்கு மாத்துவீங்க?
எங்களால புது ரூல்சை பத்தே நிமிசத்துல கொண்டு வரவும் முடியும், பழைய ரூல்ஸ் செல்லாம ஆக்கவும் முடியும்
நல்ல விஷயத்தை நாளைக்குக்கூட சொல் ஆனா கெட்ட விஷயத்தை , மோசமான செய்தியை உடனடியா என் கிட்டே பாஸ் பண்ணு
உனக்கு எதிரா வேலை செஞ்சும் அவரை ஏன் தண்டிக்காம விட்டுட்டே? என நண்பன் கேட்குறப்ப
அவருக்கு என் அப்பா வயசு என சொல்லுறதுனு சிறப்பான வசனங்கள் மனதில் பதிந்து விடுகிறது.
நாம வானத்தை அண்ணாந்து பார்த்தே பழக்கப்பட்டுட்டோம். வானத்துக்குப்போய் அங்கே இருந்து பூமியைப் பார்க்க நினைக்க தவறிட்டோம் என்பது போன்ற வசனங்கள் பாராட்ட வைக்கிறது .
லாஜிக் கொஞ்சம் மிஸ்ஸிங் திரைக்கதையில் சில நெருடல்கள்
ஏர்போர்ட்டில் ஹீரோ பிச்சை எடுக்காத குறையாக பலரிடம் மன்றாடுவது ரொம்பவே செயற்கை , அனுதாபம் பெற வலிந்து திணிக்கப்பட்ட காட்சி போல இருக்கிறது.
முதல் பாதியில் ஹீரோ ஹீரோயின் பெண் பார்க்கும் படலம் , காதல் என கமர்ஷியலாக நகருகிறது.
சூர்யா ரசிகர்களுக்கும், பெண்களுக்கும் படம் ரொம்ப பிடிக்கும்.
இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் , சூர்யாவுக்கும் இது வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்.
"வானம் என்ன உங்கொப்பன் வீட்டு சொத்தா ??" கெத்து👍
sudha kongara
&
Surya
சூரரைப்போற்று போற்றலாம் ❤
Thanks to சூரரைப்போற்று .❤
நிச்சயமாக போற்றுவோம்👍 Manjula Yugesh
Comments