நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும்
நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக வேல் யாத்திரையை ரத்து செய்தது நல்லதே. வேலை வாங்கிகொடுப்பதே எனது வேலையாக இருக்கும். நான் பி டீமாக இருந்தது இல்லை.
புழகத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி இப்போது பேச தேவையில்லை.
சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம். ரஜினிக்கு அவரது உடல்நலன் தான் முக்கியம். அரசியல் பிரவேசம் பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
Comments