ஓல பக்கோடா செய்வது எப்படி
ஓல பக்கோடா செய்வது எப்படி சீவல் என்றால் வெற்றிலை பாக்குடன் தாம்பூலத்துடன் சேர்க்கும் ஒரு பொருள். கிச்சனிலும் ஒரு சீவல் உண்டு. அது, ஓல பக்கோடா எனவும் அழைக்கப்படும். இந்தச் சீவலுக்கு தேவையான பொருள்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை மாவு - அரை கப், காய்ந்த மிளகாய் - 5, வெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி, பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அதோடு காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் கடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில் சீவல் அச்சை போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். காபி மற்றும் டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Comments