உணவே எல்லாமாய்
உலக உணவு தினம்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி
🌾🌾🌾🌾🌾
எவ்வளவு பசி கண்களில்
அத்தனை பசிக்கும்
இந்த பிஸ்கட் போதுமா
எத்தனையோ நமக்கு லௌகீகங்கள்,
குழந்தைக்கு.......?
பசியென்று சொல்லத்தான் தெரியுமா?
பசியென்று சொல்லத்தான் முடியுமா?
சொன்னால் தீருமா?
யாரிடம் சொல்ல?
கொடுக்கும் கரங்களையோ
கொடுக்கும் நபரையோ அல்ல
கொடுக்கும் பண்டத்தின் மீதான
பார்வை பேசும்
பசியின் அதீதம்
உணவே நட்பாய்
உணவே அன்பாய்
உணவே தெய்வமாய்
உணவே எல்லாமாய்
பிஞ்சின் கண்களில் நீர்
பசியாற்றும் உணவே அன்பின் வடிவாய்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்....
கவிஞர்
#மஞ்சுளா யுகேஷ்
Comments