சாமான்ய மக்களின் சகோதரன்
சாமான்ய மக்களின் சகோதரன்... அக்டோபர் 9 உலக தபால் தினம்
உலக தபால் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தபால் சேவையென்பது இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தொலைவில் உள்ளவர்களுடன் பரிமாறி கொள்ள புறாக்களை பயன்படுத்தினான். ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவிப்பு செய்த காலங்கள் மாறி இன்று நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் (வாட்ஸ் ஆப்) வரை தகவல் தொடர்புத்துறை வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது.
நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் சேவை மிகவும இன்றியமையாத ஒன்றாக இன்றும் காணப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்கள் கடிதப் பரிமாற்றங்களுடன் தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள், தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாக கொண்டிருந்தன. ஆனால், இன்றைய காலத்தில் தபால் நிலையங்கள் முடங்கிவிட்டன.
தபால் பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன. 1852ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாகாணத்தில் 3 தபால்பெட்டிகளும், லண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இதில் லண்டனில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால் பெட்டிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசலாம் என அறிவுறுத்தப்பட்டது. பச்சை நிற தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால், அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களை போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது உலகில் ஏறத்தாழ 6 லட்சத்து 70,000 நிரந்தர அஞ்சல் அலுவலகங்கள் இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு மில்லியன் பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், சர்வதேச ரீதியில் 4 லட்சத்து 30,000 மில்லியன் தபால் பொருட்கள் வருடந்தோறும் கையாளப்படுகின்றன.
இந்தியாவில் தபால் குறியீடு எண் ஆறு எண்களை கொண்டிருக்கும். உதாரணமாக 6060000. இலங்கையிலும் தற்போது தபால் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகின்றது.
இது ஐந்து இலக்கங்களைக் கொண்டதாகும். இலங்கையில் முதல் எண் மாகாண இலக்கமாகும். ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாமான்ய மக்களின் சகோதரன்...
அஞ்சல் அலுவலகங்கள்
Comments