அனாதையாய் கடிதங்கள்
முகம் மறந்த உனக்கு
இன்னும் கூட முகவரியில்லாமல் தான்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்!
நிஜம் மறுத்த உனக்கு
எழுதிய நிஜங்கள் மட்டும் எதற்கு?
இன்னும்
காகிதங்களும்
பேனாவும் மிச்சத்தில்
ஆயிரமாய் வார்த்தைகள் யோசித்து
ஒருநூறில் உனக்கான செய்தியை
ஒருவழியாய் எழுதிவிட்டேன்
என்
முகவரியும் திருடிப்போன
உன்னிடம் எப்படி சேர்ப்பிக்க?
அன்பின் முத்திரை குத்தப்பட்டும்
அனாதையாய் கடிதங்கள்!
இனிய தபால் தின வாழ்த்துகள்...
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்.
Comments