நவராத்திரி ஸ்பெஷல் - மக்காச்சோளச் சுண்டல்
நவராத்திரி ஸ்பெஷல் - மக்காச்சோளச் சுண்டல்
நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு.
நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனத்தில் புத்துணர்ச்சி பெருகும்.
மனம் செம்மையாகும். செம்மையான மனத்தின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும் என்கின்றன புராணங்கள். இந்த நன்னாளில் வித்தியாசமான மக்காச்சோளச் சுண்டல் செய்து வழிபடுங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.
தேவையான பொருள்கள்:-
மக்காச்சோளம் - ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய், பூண்டு பல் - தலா 2
சோம்பு - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:-
மக்காச் சோளத்தை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.
Comments