திருவருட்பிரகாச வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்
.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (05.10.1823)இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.
இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,
“ | ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் | ” |
என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.
இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.] மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன
இவரின் கொள்கைகள்
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
- புலால் உணவு உண்ணக்கூடாது
- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
- மத வெறி கூடாது
வளரும் பிள்ளைகளுக்கு இவர் வழங்கிய அறிவுரைகள்
- நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
- ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
- பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
- இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
- குருவை வணங்கக் கூசி நிற்காதே
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
- தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே
-
- இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன
-
- கொல்லாமை புலால் மறுத்தல் மூடநம்பிக்கை அகற்றல் வழிபாட்டில் பேதம் பார்க்காமை சாதி மதம் சிறுதெய்வவழிபாடு போன்றவற்றை தன் வாழ்நாளில் எதிர்த்தவர் வள்ளலார். சாதி மதச் சண்டைகள் சமுதாயத்தை பின்னோக்கி அழைத்துச்செல்லும் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தார். 1970ம்ஆண்டில் ஒரு VIP வள்ளலார் நிறுவிய சங்கத்தினை பார்வையிட வடலூர் சென்றார். வெளியே சுற்றிப்பார்த்த அவரை உள்ளேயும் வந்து பார்க்குமாறு சன்மார்க்க நிர்வாகிகள் அழைத்தனர். "கொலை,புலால் மறுத்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம் "என்று வள்ளலார் நிபந்தனை விதித்துள்ளார்.அதை மீறி நான் உள்ளே வரமுடியாது,ஏனெனில் நான் புலால் உணவு உண்பவன் என்று கூறி உள்ளே வராமல் வெளியே சுற்றிப்பார்த்து விட்டுச்சென்றார். அந்த VIP தந்தை பெரியார் என்ற விவரம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த வள்ளலார் விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் நினைவூட்டினார் .நாமும் இயன்றவரை வள்ளலார் பணியில்
ஈடுபடுவோம்.
- கொல்லாமை புலால் மறுத்தல் மூடநம்பிக்கை அகற்றல் வழிபாட்டில் பேதம் பார்க்காமை சாதி மதம் சிறுதெய்வவழிபாடு போன்றவற்றை தன் வாழ்நாளில் எதிர்த்தவர் வள்ளலார். சாதி மதச் சண்டைகள் சமுதாயத்தை பின்னோக்கி அழைத்துச்செல்லும் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தார். 1970ம்ஆண்டில் ஒரு VIP வள்ளலார் நிறுவிய சங்கத்தினை பார்வையிட வடலூர் சென்றார். வெளியே சுற்றிப்பார்த்த அவரை உள்ளேயும் வந்து பார்க்குமாறு சன்மார்க்க நிர்வாகிகள் அழைத்தனர். "கொலை,புலால் மறுத்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம் "என்று வள்ளலார் நிபந்தனை விதித்துள்ளார்.அதை மீறி நான் உள்ளே வரமுடியாது,ஏனெனில் நான் புலால் உணவு உண்பவன் என்று கூறி உள்ளே வராமல் வெளியே சுற்றிப்பார்த்து விட்டுச்சென்றார். அந்த VIP தந்தை பெரியார் என்ற விவரம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த வள்ளலார் விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் நினைவூட்டினார் .நாமும் இயன்றவரை வள்ளலார் பணியில்
Comments