ரோஹித் சர்மா நீக்கம்.
ரோஹித் சர்மா நீக்கம்.. உத்தேச அணியில் கூட இடமில்லை..
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வித அணிகளும் முழுமையாக அறிவித்தது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. மூன்று அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறாத நிலையில் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஆடி வந்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி இரு போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவர் நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இடது காலில் தசைப்பிடிப்பு என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.
தசைப்பிடிப்பு பொதுவாக ஒரீரு நாட்களில் குணமடையும். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவருக்கு வலி அதிகம் இருப்பதால் பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
Comments