வயதானவர்களை போற்றுங்கள்
சர்வதேச முதியோர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் வயதான குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியவை என்று சில உள்ளது.
அன்பாய் இருங்கள் அவர்களிடம் உங்களுடைய கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.நீங்கள் பெற்ற குழந்தைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு தாருங்கள்.பெற்றோர்கள் மட்டுமின்றி வயதான குழந்தைகளாக தெரியும் அனைவரையும் அரவணைக்க பழகுங்கள்..
ஒரு உண்மையை சொல்ல போனால் 60 வயதை கடந்தவர் எவராயினும் அவர்களின் மனம் மீண்டும் சிறு வயதை நோக்கி பயணிக்கும்.அப்படி இருக்கும் தருவாயில் மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் எதையும் பேசவோ செய்யவோ போவதில்லை.ஆக, வயதான குழந்தைகளுக்கு தேவை அன்பும் ஆதரவும் தான்.
இவற்றால் பெருகி வரும் முதியோர் இல்லங்களை தவிர்க்கலாம்.
2019 ம் ஆண்டு தான் அதிக அளவில் முதியோர்கள் வாழ்ந்த ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உலக வரலாற்றில் இது தான் முதல்முறை.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ம் தேதி சர்வதேச முதியோர் தினமாக ஐ.நா.அறிவித்துள்ளது.1991 ம் ஆண்டு அறிவித்து 2002 - ல் முதியோர்களுக்கான சிறப்பு அம்சங்கள் பலவற்றை அரங்கேற்றம் செய்தார்கள்.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வயது சமத்துவத்திற்கான பயணம் (The Journey to Age Equality ) என்ற தலைப்பில் இந்நாளனது தனது செயல்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ் முதியோர் இல்லங்கள்,தொடர் சிகிச்சை மையம், நடமாடும் மருத்துவ மையம் போன்றவை இயங்கி வருகின்றன.முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூபாய் 1000 - த்தை பதினான்கு லட்சம் முதியோர்கள் வாங்கி பயன் பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.
மேலும், முதியோர்களுக்கான நிமோனியா தடுப்பூசியில் தற்போது வரை மூன்றாயிரம் முதியோர்களுக்கு போடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
வயதானவர்களை போற்றுங்கள்.நாளை சமுதாயத்திற்கு வயதானவர்களின் கருத்துகள் தேவை என்பதை உணருங்கள். மீண்டும் மீண்டும் நான் சொல்லுவது முடிந்தளவு அனைவரும் வயதானவர்களுக்கு அன்பு கரங்களை நீட்டுங்கள்..!
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments