‘கொலையுதிர் காலம்’ படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுவதாக நயன்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. மேலும் இவர் கிட்டத்தட்ட 18 வருடங்களாக திரைத் துறையில் பணியாற்றி வருகிறார்.
நயன்தாராவின் மங்காத அழகும் வசீகரத் தோற்றமும் தான் அவர் இத்தனை ஆண்டுகாலமாக திரையுலகில் உலா வர துணை புரிந்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
ஆனால் நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஒரே ஒரு படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. மேலும் அந்த படத்தை பற்றி நயன்தாரா ‘அந்தப் படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளாராம்
அதாவது கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துள்ளார்.
இவ்வாறு இருக்க நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடதக்கது.
இதற்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, அந்தப் படத்தின் கதை கூட கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் இதற்கு காரணம் என்று நயன் தெரிவித்துள்ளாராம்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக தான் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
Comments