சிவ கவிதை
இன்று பிரதோசம். ❤️
சிவ கவிதை
சிவனே போற்றி
சிந்தையில் சிவனிருந்தால்
சகலமும் கைகூடும்
சிறப்பான வாழ்வுடன்
சீரிய வெற்றியும் கிட்டும்
சங்கடம் பல வரினும்
சங்கரன் புகழ் பாடுவோம்
சடுதியில் சங்கடம் போக்கும்
சிவாய நம என்போம்
உலகம் தழைக்க
ஆலகால விடம் உண்ட
உமையவளின் உயிராம்
ஆதி அந்தம் இல்லாதவர்
அருந்தவம் புரிந்தாலும்
அடியார்க்கு அடியாராய்
அவர்தம் துன்பம் போக்கும்
சிவனை துதிப்போம்.
ஓம் நம சிவாய ❤️
கவிஞர்
#மஞ்சுளாயுகேஷ்.
Comments