நவராத்திரி என்றால் குதூகலம்.
நவராத்திரி என்றால் குதூகலம்.. நவராத்திரி என்றாலே அழகு!
பொதுவாக எங்கள் வீடுகளில் வழக்கமில்லையெனினும் பொம்மைகளின் வண்ணங்களும் வடிவங்களும் எப்போதும் எனக்குப் பெரும்சந்தோஷம் ஊட்டுபவை.
ஆதலால் நவராத்திரி வந்துவிட்டாலே சந்தோஷம் வந்துவிடும் .
எனது தோழிகள் இல்லத்திற்கு சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவை ஆர்வத்துடன் ரசித்து மகிழ்வேன்...
குறளகத்தில் நடக்கும் பொம்மை கண்காட்சி க்கு சிறு வயதில் குடும்பத்தோடு சென்று பார்த்து மகிழ்வோம் .
என் அம்மாவிற்கும் ,சகோதரிக்கும் பொம்மை கண்காட்சி செல்வது என்றால் அவ்வளவு ஆனந்தம் அனைத்து விதமான பொம்மைகளையும் ரசித்து பார்த்து சந்தோஷப்படுவாங்க.
வித விதமான பொம்மை களை வாங்கி வந்து வீட்டில் அலமாரியில் அடுக்கி வைத்திருப்பேன்.
ஏராளமான பொம்மைகள் இன்றும் எங்கள் வீட்டு அலமாரியில் அழகாக இருக்கிறது.
புரட்டாசி பிறந்தால் போதும் நானும் அம்மாவும் புறப்பட்டு விடுவோம்.. காதி பவன், குறளகம், சங்கரா ஹால் என கொலுபொம்மைகள் விற்குமிடங்களுக்கு. பொம்மைகள் அணிவகுப்பு...பார்க்கப் பார்க்க பரவசம் வந்துவிடும்.
எத்தனை வித அலங்காரங்கள், எத்தனை வகை ரங்கோலிகள், எவ்வளவு அழகிய பொம்மைகள்! எவ்வளவு உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்கள்!ஆனந்தம் வழியும் அத்தனை முகங்களும் அம்பாள் அம்சம் கொண்டிருக்கும்...
நவராத்திரி
பல நூறு வருடங்களான பொம்மைகள்!! தலை முறையாக வரும் பொம்மைகள்!! அதோடு வருஷா வருஷம் ஒரு சில புது பொம்மைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன..
ஜேஜேன்னு இருக்கும் பத்து நாளும் ! யார் என்ன அலங்காரம் பண்ணிருக்காங்க என்ன கலர் பட்டுப்புடவை கட்டலாம் என தோழிகளுடன் ஆலோசனை நடக்கும்.
தினமும் பலவித சுண்டல்கள் கலெக்ஷண்ல வரும், எத சாப்பிடுரது, எவ்வளோ சாப்பிடுறதுன்னு திணரும் அளவுக்கு!! சில பேர் வீட்டில் எங்களுக்கு அங்கேயே சுண்டல் குடுத்து சாப்ட சொல்லிட்டு, கையில் ஒரு பொட்லமும்!! இதை தவிர தாம்பூலப்பை என குவியும்.
ஒரு பக்கம் முடிச்சுட்டு, அந்த கலக்ஷன்ஸை வீட்டுக்கு ஓடி வந்து வச்சுட்டு, அடுத்த கலெக்ஷன் பண்ணுவோம், இல்லேன்னா தூக்க முடியாது எங்களால!! சாயங்காலம் ஒரு ஆறு மணி அளவில் ஆரம்பிச்சா, 7-7.30 வரையில் முடியும்!
அதன்பிறகு கோவில்களுக்கு செல்வோம்.
அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அழகாக அலங்காரம் பண்ணிருப்பாங்க .
இந்த வருடம் அனைவரின் பாதுகாப்புநலன் கருதி வீட்டோடு மட்டுமே கொண்டாடி வருகின்றனர்.
இங்கு படத்தில் காண்பது எனது தோழி கவிதா வெங்கடேஷ் துபாயில் அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் அழகிய கொலு
கொலு வைத்ததுமே படம் எடுத்து எனக்கு அனுப்பினார்கள்
படங்களில் பார்த்தும் அவ்வளவு மகிழ்ச்சி.
இந்த வருடம் கொலுவில் சாய்பாபா கோதுமை அரைப்பது போன்ற சிலையும் வைத்திருந்தார்.
முருகன் வள்ளி தெய்வானை அழகாக வீற்றிருந்தனர்.
என் தோழியின் மகள்கள் சுருதி ,சுவேதா கவனமாய் பொம்மைகளை மிகுந்த கலைநயத்துடன் அடுக்கி இருந்தார்கள்.
பார்க்கவே அழகாகவும் அம்சமாகவும் இருந்தது.
விளக்கின் அசையாச்சுடர் ஒளி வீட்டை நிறைப்பது போல் பண்டிகை தரும் மகிழ்வுணர்வும் நேர்மறை எண்ணங்களும் நெஞ்சம் நிறைக்கின்றன!
விரைவில் சகஜ நிலை திரும்ப கடவுளை பிரார்த்தனை செய்வோம்
இந்த நினைவுகளை பீப்பிள் டுடே வாசகர்களாகிய உங்களிடம் பகிர்வது ரொம்ப சந்தோஷமாருக்கு!!
நவராத்திரி வாழ்த்துகளுடன்
படங்கள்:- சுருதி வெங்கடேஷ் சுவேதா வெங்கடேஷ் .துபாய்
மஞ்சுளா யுகேஷ்.
Comments