ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரஜினிகாந்த்
ஆறரை லட்சத்தால் அசிங்கப்பட்ட ரஜினி..
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் மக்களின் மனதில் பெற்றவர் தான் ரஜினிகாந்த்
ஆறரை லட்சதிற்காககாக நீதிமன்றத்தில் அசிங்கப்படுத்தபட்ட அவலம் ரஜினியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அரசாங்கம் சொத்து வரி விதித்ததற்கு நீதிமன்றத்தை ரஜினிகாந்த் நாடியது அவரை தேவையற்ற விமர்சனங்களில் சிக்க வைத்துள்ளது.
அரசியல் ஆர்வலரும் மூத்த பத்திரிகையாளருமான கணபதி ரஜினியை சரமாரியான கேள்விகளாலும், கருத்துக்களாலும் விமர்சித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
மேலும் சொத்துவரி விவகாரத்தில் ரஜினி சற்றும் யோசிக்காமல் தேவையில்லாமல் நீதிமன்றத்தை நாடி தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்துகொண்டுள்ளார். இதை அடுத்து இன்று சத்தமில்லாமல் வரியை முறைப்படி கட்டி ரசீதையும் பெற்றுக் கொண்டுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த தடுமாற்றத்தை பார்த்தால் ரஜினிக்கு ஆலோசனை கூற உரிய நபர்கள் அவருடன் இல்லை என்பது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார் கணபதி.
மேலும், ‘வருமானம் இல்லாததால் எனது வருமான வரியை குறையுங்கள் என்று ரஜினி கேட்டிருந்தால் அதில் ஒரு அர்த்தம் உண்டு. சொத்து என்பது நிரந்தரமானது. அதில் ரஜினி சலுகையை எதிர்பார்த்தது மிகவும் தவறான விஷயம்’ என்று தெரிவித்துள்ளார் கணபதி.
இவ்வாறு தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி ஆறரை லட்சம் ரூபாய்காக அல்லல்பட்டது தமிழ்நாடெங்கும் மூலைமுடுக்கெல்லாம் பரவி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Comments