முகக்கவசத்தை குழந்தை கழற்ற முயற்சிக்கும் குழந்தை.
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால், இதுவரை கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.
முகத்தில் இருக்கும் மாஸ்குகளை கழட்டும் நேரம் எப்போது வரும் என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை, தனது கையில் தூக்கியவாறு, மருத்துவர் ஒருவர் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த முகக்கவசத்தை அந்த குழந்தை கழற்ற முயற்சிக்கிறது.
இந்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், மாஸ்கை விரைவில் கழட்டப்போகிறோம் என்ற அறிகுறியை இந்த புகைப்படம் விளக்குகிறது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Comments