சிலம்புச் செல்வர்
சிலம்புச் செல்வர் மதிப்புக்குரிய ஐயா மா பொ சி அவர்களின் நினைவு நாள் இன்று.
சிலம்புச் செல்வர் அய்யா, தமிழ் சமுதாயத்துக்கும், தமிழக மக்களுக்கும், செய்த பெருமை மிகு செயல்களைப் பற்றி காண்போம்
சென்னை மாநகரம் தமிழர்களுக்கே என அடுத்த நடவடிக்கையாக மா. பொ. சி. அவர்கள் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு தமிழர்கள் அனைவரையும் தந்தி அடிக்கச் சொன்னார்
தமிழர்கள் தந்திகளால். திக்குமுக்காட வைத்தனர் என்று காமராஜரிடம் சொன்னார் உள்துறை அமைச்சர் திரு. லால்பகதூர்சாஸ்திரி அவர்கள்,
மீண்டும் ஒரு யோசனை வந்தது மா. பொ. சி அவர்களுக்கு.
அன்றே சென்னை மேயர், செங்கல்வராயனை சந்தித்து பேசிய மா. பொ. சி. அவர்கள் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போட வேண்டும் என்றார். தமிழர்களுக்காக என் பதவியே போனாலும் அதனைப் பற்றி கவலை இல்லை என மேயர் செங்கல்வராயன் தெரிவித்தது மட்டுமல்லாமல், சென்னையை ஆந்திர மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என போராடுபவர்கள் வீட்டிற்கு தண்ணீர் தர மாட்டேன் என முடிவெடுத்து, இதற்காக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய மா.பொ.சி. அவர்கள்
தலை கொடுத்தேனும் தலைநகர் காப்பேன் கடைசி ஒரு தமிழன் உயிருடன் இருக்கும் வரை ஆந்திரர்கள் சென்னையை அடைய விடமாட்டோம் என்றார்.
பிரதமர் நேரு அவர்களின் மனதை மாற்றியது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.டி
கிருஷ்ணமாச்சாரியிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்து விட்டு நான் செயல்பட முடியாது என்றார் பிரதமர் நேரு அவர்கள்.
ஆந்திரா அமையும். அதன் தலைநகரம் ஆந்திராவுக்கு உள்ளே அமையும். ஆந்திரா அரசு சென்னை நகரின் கலாச்சார வாழ்வில் குறுக்கிடக் கூடாது. குறுக்கிடாது என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நேரு பேசினார். அப்படி காப்பாற்றப்பட்டது தான் தலைநகர் சென்னை.
தலைநகர் காப்பாற்ற பட்டதே தவிர, தமிழர்கள் பகுதிகள் அனைத்தும் காப்பாற்ற படவில்லை. 1911 ஆண்டு சித்தூர் மாவட்டம் உருவானது. அப்போது அதன் தலைநகரமாய் வேலூர் இருந்தது. அதுவரை ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த திருத்தணி, புத்தூர், சித்தூர், காளஹஸ்தி, சந்திரகிரி எனப்படும் திருப்பதி பலமனேரி ஆகிய பகுதிகள் சித்தூர் மாவட்டம் ஆக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக அவை புதிய மாவட்டங்களாக ஆக்கப்பட்டன. ஆந்திரா பிரியும் போது இதுவும் ஒன்றாகும் என்று சொல்லிவிட்டார்கள்.
வடவேங்கடம் என்பது தமிழர் பகுதியே, அதனை விட மாட்டோம் என சொன்னது மட்டுமல்லாமல் மா. பொ. சி ஐயா அவர்கள்
திருத்தணி தொடங்கி திருப்பதி வரை போராட்ட களமாக மாற்றினார்.
1953 இல் தனி ஆந்திரா அமைந்தது. படாஸ்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், தமிழர் பகுதியை கிராமம் கிராமமாக பிரித்து சிதைத்தது.
திருத்தணி வட்டத்தில் 200 கிராமங்கள், சித்தூரில் 29 கிராமங்கள், புத்தூரில் ஒரு கிராமமென தமிழகத்துக்கு கொடுத்தார்கள்.
சித்தூர், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகம் ஆகியவை தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டும்.
திருத்தணியும், திருவேலங்காடும், ஓசூரும் கிடைத்தது என திருப்திப்பட்டுக் கொண்டோம். அன்றைய காங்கிரஸ் அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்பதால் மா. பொ. சி அவர்கள் அதை ஏற்க வேண்டியதாயிற்று.
சிலம்புச்செல்வர், மா. பொ. சி. அவர்கள் செய்த அறப்போராட்டத்தின்
வழியே, சென்னை மாநகரம் தமிழர்களுக்கு வந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என, நாம் என்றென்றும் நினைவில் கொள்வோம்.
வாழ்நாள் முழுவதும் எளிமையாக தன்னலம் கருதாது வாழ்ந்த வாழ்ந்த மா. பொ. சி அவர்களின் செயலினை என்றென்றும் நாம் போற்றுவோம்
முருக சண்முகம்
சென்னை
Comments