காலங்களில் அவர் வசந்தம்
பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, அவர்கள் செப்டம்பர் 22, 1930 பிறந்த
அவரின் 91வது பிறந்தநாள் இன்று
- தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. கனஹிபரது என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், 1953 இல் வெளிவந்த ஜாதகம் படத்தில் இடம்பெற்றது.
ஆங்கிலம், உருது உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். மதுவண்டு என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.
தமிழ்த் திரையிசை உலகில் டி. எம். சௌந்தரராஜன் புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்' எனும் பாடலைப் பாடி பெரும்புகழை ஈட்டினார். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் இவர் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.
இவர் தனது 83வது வயதில் 2013ம் ஆண்டு ஏப்ரல் 14ம்நாளன்று காலமானார்
தமிழ் படங்களில் காட்சி சூழலுக்கேற்ப ஒரு சில படங்களில் மாற்றுமொழி பாடல்கள் வருவதுண்டு. அப்படி வருவது அரிதாக இருந்தாலும் சில பாடல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து விடுவதுண்டு.
அப்படி ஒரு பாடல்தான் இது. ஹேய் சகுகுன் குச்சு கெகன சகுன் என்ற இந்த பாடலை கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. புதிதாக கேட்பவர்களும் இப்பாடலை கேட்டால் கண்டிப்பாக மயங்கி விடுவார்கள்.
மறைந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கி அசோக்குமார் ஒளிப்பதிவு செய்த நண்டு படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. இந்த பாடலை பிரபல பழம்பெரும் பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் எழுதினார்.
படத்தின் காட்சி சூழல் வட மாநிலத்தில் இருக்கும் மாப்பிள்ளை தமிழ்ப்பெண்ணை பெண் பார்க்க வருவதாக அமையும். இந்த பாடலுக்கு அழகிய இசையை வெளிப்படுத்தி இருந்தார் இளையராஜா.
பிரபல பாடகி எஸ்.ஜானகி அவர்களும், ஹிந்தி பாடகர் புபேந்திராவும் இப்பாடலை இணைந்து பாடினர். அப்படி ஒரு அருமையான பாடல் கேட்காதவர்கள் கேட்டு இன்பம் பெறவும்
jayanthi
Comments