நல்லாசிரியை பி.ஆரோக்கிய செல்வி
நல்லாசிரியை பி.ஆரோக்கிய செல்வி
பதினைந்து வருடமாக ஆசிரியர் பணியில் உள்ள திருமதி.பி.ஆரோக்கிய செல்வி அவர்கள் M .A .B.Ed., முடித்து விட்டு தமிழாசிரியையாக பணியாற்றுகிறார்.
இவர் ஆசிரியர் மட்டுமின்றி, ஜிக்ஜேக்ளர் சொல்லியதை போன்று கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள் என்ற வாக்கியத்திற்கினங்க இளந்தளிர் கடலூர் - செயலர் அமைப்பின் வழி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அதற்காக மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து ஊக்குவித்தல் போன்ற சிறப்பான நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார்.
தற்போது கூத்தப்பாக்கம் என்ற ஊரிலுள்ள "செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி"-யில் 11 வருடமாக பணியாற்றி வருகிறார்.
மேலும், திருமதி.பி.ஆரோக்கிய செல்வி அவர்கள் கவிஞர்,பட்டி மன்ற பேச்சாளர்,பட்டி மன்ற நடுவர், சொற்பொழிவாளர் ,கருத்தரங்க கருத்தாளர்
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்தல்,, தொகுப்பாளர் போன்ற பலவிதமான கலைகளை தன்னுள் வைத்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
கொரானா பேரிடரில் பெரிய அளவில் தன்னுடைய பொது சேவையை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சக மனிதனிடம் நேசிப்பு பழக்கத்தை எவ்வாறு கொண்டு வரலாம் என்றால் உண்பதற்கு உணவு இல்லையென்று உணரும் போது அத்தருணத்தில் அந்த இடத்தை பூர்த்தி செய்து பசியை போக்கும் போது தான் மானுடப் பிறப்பு சக மனிதனை நேசிக்கத் தான் என்ற புரிதல் வரும்.
இவ்வாறாக கூறும் திருமதி.பி.ஆரோக்கியசெல்வி அவர்கள் தனது எதிர்கால திட்டங்களாக சிலவற்றை முன்வைக்கிறார்.
தமிழ் பணி ஆற்றுதல் மாணவர்களுக்கான நோக்கவுரை ஆற்றுதல்
இயற்கையைப் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கச் செய்தல்...
பல கலைகளில் தொடர்ந்து தனது பணியை நேர்த்தியாக செய்து வரும் ஆசிரியரின் எதிர் கால திட்டம் நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாங்கிய விருதுகள் :
அருட் கலைமாமணி,தொண்டரச் செம்மல்,பாரதி விருது,கவிச்சிகரம்,கவித்தென்றல், இலக்கிய
கவிச் செம்மல்,இலக்கிய செல்வர்,நக்கீரர் விருது, நட்சத்திரக் கவி பெருமகள்,Best Motivator award, சமூக சேவகி செம்மல் விருது,அறிவேந்தல் விருது.
- கீர்த்தனா
Comments