தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்'
திரு. வி. கலியாணசுந்தரனார் நினைவஞ்சலி
😢
இலக்கிய உலகில் பெரும் புலவராக, - சமய உலகில் சான்றோராக, - அரசியல் உலகில் தலைவராக - பத்திரிகை உலகில் வழிகாட்டியாக - தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் திரு.வி.க.
'தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்' என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளருக்கு பெயர் உண்டு. தமிழ் மொழியில் ஒருவருக்கு அப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றால், அவர் திரு.வி.க.வே என்று உடனே கூறி விடலாம். உரைநடை, சொற்பொழிவு, பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர் திரு.வி.க.
இருபதாம் நுாற்றாண்டின் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பாரதியார் ஆணிவேராய் விளங்கியது போல், உரைநடை வளர்ச்சிக்குத் திரு.வி.க. மூலவராய்த் திகழ்ந்தார். 'உரைநடைக் கம்பர்' எனச் போற்றத் தக்க அளவிற்கு அவர் உரைநடையில் நுால்களை எழுதிக் குவித்தார். 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', 'இந்தியாவும் விடுதலையும்', 'உள்ளொளி', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' முதலான நுால்கள் இவ் வகையில்சிறப்பாகக் குறிப்பிடதக்கது
நன்றி :ஆந்தை ரிப்போர்ட்டர்
Comments