சிவப்பு கற்றாழை சிறப்பு.
சிவப்பு கற்றாழை சிறப்பு.
.. சித்தர்கள் குறிப்பிடும் காய கற்ப மூலிகை,தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும் இதனைப் பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர்
.உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்ப தனை சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்துள்ளனர்
. பொதுவாக கற்றாழையில் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக் கள் ஏராளமாக உண்டு.இது உடலில் சேரும் நஞ்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கின்றது. எனவே இதனை முறைப் படி உண்டோமானால் முதுமை தோன்றாமல் தேகத்தை என்றும் இளமை யுடன் (காய கற்பம்) காத்துக் கொள்ளலாம்.
சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலை சீவி நீக்கி விட்டு அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி விடவும்.பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரை விட்டு அலசவும்.இதே போல் ஏழு முறை தண்ணீர் விட்டு கழுவி விட்டு எடுத்து திரிகடுகு தூளில் பிரட்டி மென்று உண்ணவும். இதேபோல் காலை - மாலை உண்ணவும்.தொடர்ந்து ஒரு மண்டலம் - 48-நாள் உண்ணவும்.இதுவே காயகற்பம் ஆகும். இதன் பலன்கள் :
உடலில் கஸ்தூரி வாசனை வீசும்,.உடலில் வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று "குண்டலினி"யோகம் சித்திக் கும்.
Comments