சுவர்ண பைரவர்
சுவர்ண பைரவர் (சொர்ண ஆகர்ஷண பைரவர்)
சுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார்.
இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும்.
சுவர்ண பைரவரின் தோற்றம்
சுவர்ணாகர்ஷண பைரவர் பொன் நிறம் கொண்டவர்.மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராகவும், முக்கண்களை உடையவராகவும், நான்கு கரங்களைக் கொண்டவராகவும்,மாணிக்க மணிகள் இழைத்த பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியவராக காணப்படுகிறார்.
இரும்பு, ஓரி, சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றை தரித்துள்ளார். வலக்கையில் அபய முத்திரையை காட்டியபடியும், இடது கையால் பைரவியை அணைத்தபடியும் உள்ளார்.
பைரவரின் இடத்தொடையில் அமர்ந்திருப்பவர் சொர்ண பைரவி என அழைக்கப்படுகிறார்.
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள்.
இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது.ஸ்வர்ணம் (தங்கம்)தந்தருளியவர் என்பதால் கபாலத்தை,அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்
ஓம் பைரவா போற்றி
தேய்பிறை அஷ்டமி !
பைரவர் வழிபாடு
!! இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளை வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை
நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்
. மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும். இவர்களே செல்வத்துக்கு அதிபதி. மஹா விஷ்ணு, மகாலட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும். அவ்வாறு ஜபித்தால், பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் ஐதீகம். வர வேண்டிய பணம் வந்துவிடும். தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும். சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
அஷ்ட பைரவர் ஆலயம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆறகளூரில் உள்ளது.
படித்தேன் பகிர்ந்தேன்
.
Comments