அங்குச முனை
அங்குச முனை
அகில உலகயாகைள் தினத்திற்காக கவிதை
அங்குச முனை
மழுங்காதிருக்கும்
வரைக்கும் உத்தமம்,
உள்சீற்றம் உறங்கிக்கொண்டு
இருக்கும்!
மதப்பிடித்தம்
யாருக்கு தேவை
மனப்பிடித்தம்
குறை கண்டாலே
போதும்
அதகளம் நிகழ்ந்துவிடும்.
அன்பென்றோ
அடக்குதலென்றோ
எதுவாகவேண்டுமானாலும்
பெயர்சூட்டிக்கொள்ளலாம்.
. அங்குச முனை கூறாக
இருக்கும் காலம் வரைக்கும்
. ஆக அங்குச கேடயங்கள் அணிந்தே
அருகாமை யோசியுங்கள்.
கூர் தீட்டல் புதியதாய்
பழகி இருக்கிறீர்கள்...
உன்மத்தம் ஆதிப்பழையது
உடன் பிறந்தது.
உன்மத்தம் பலநேரம்
உலகை புரட்டும்
அங்குசங்கள் எம்மாத்திரம்?
மஞ்சுளா யுகேஷ்.
Comments