மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பாக முதலாம் ஆண்டு வீர வணக்க நாள்
மக்கள் பாதுகாப்பு பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு. R. சந்திரசேகர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று பேரவைத் தலைமை அலுவலகம் எதிரில்
*24/08/2020 காலை பத்து முப்பது மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு.ஷாம் ஜெய்கரன் அவர்கள் தலைமையில் பேரவையின் *நிறுவனத்தலைவரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான திரு. தங்க சாந்தகுமார் அவர்கள் , தெய்வத்திரு R.சந்திரசேகர் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து நினைவுரையாற்றினார். இதில் பேரவை சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வணக்கங்கள் செலுத்தினர். அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதலும் உதவியும் செய்யப்பட்டது அதுமட்டுமல்லாமல் அன்னாரின் குடும்பத்திற்கு எப்பொழுதும் பேரவை சொந்தங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழியும் ஏற்கப்பட்டது
இந்த நிகழ்வின் காணொளி
Comments