பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், இயற்கை வழிமுறைகளும்.
பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், இயற்கை வழிமுறைகளும்...
17-08-2020
எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தான் சுத்தமாக இருப்பதும், தன் அருகில் உள்ளவர்கள் சுத்தமாக இருப்பதும்தான் பிடிக்கும். பெண்களைப் பொறுத்தவரை சுத்தமாக இருப்பதோடு மட்டுமின்றி, மற்றவர் கண்களுக்கு தான் அழகானவளாக தோற்றமளிக்க வேண்டும் என்பது மிக அதிகம் பிடிக்கும். தன்னை அனைவரும் விரும்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது இயற்கை. உடலிலிருந்து, துர்நாற்றம் வீசும் பெண்ணை யாரும் நெருங்க மாட்டார்கள், சுத்தம் என்று வரும்போது அதில் அனைத்து உடல் பாகங்களும் அடங்கும். குறிப்பாக, ஆண் பெண் உடலுறவுக்கும், கருத்தரிக்கவும், கருவிர்ல 10 மாதம் வளர்ந்த குழந்தையை ஈன்றெடுப்பதற்கும் பிறப்புறுப்பின் அவசியத்தை அனைத்து வயதுக்கு வந்த பெண்களும் அறிந்துள்ளனர். எனவே பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்று களும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
குறிப்பாக பெண்கள் உடலுறவில் ஈடுபடும்போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின்பற்றுவார்கள். இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் உள்ள லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
சீமை சாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமை சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் பெரிய டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும்.
டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத் தைப் போக்கும். அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும். இது பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும்.
நெல்லிக்காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, துர்நாற்றம் போய் விடும்.
Comments