டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை
டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
ஆகஸ்ட் 11, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று இளம் மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். சில மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று கூட்டத்தில் அமித் கரே வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments