சத்துணவு ராகி மசாலா இட்லி
வீட்டிலேயே சத்துணவு ராகி மசாலா இட்லி
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது அவசியம் என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சமைக்க எளிமையான, சத்து நிறைந்த ஆரோக்கிய உணவு சமைத்து சாப்பிடலாம்.
தேவை
ராகி மாவு – 4 கப்
உளுந்து – 3/4 கப்
தாளிக்க
எண்ணெய் – 2 தே.க.
கடுகு – ¼ தே.க.
பெருங்காயம் – 1/2 தே.க.
உளுத்தம் பருப்பு – 1/2 தே.க.
காய்ந்த மிளகாய்- 2 (அ) 3
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
மசாலா சாமான்
குடை மிளகாய் - 1
கேரட் – 1
வெங்காயம்- 1
இஞ்சித் துண்டு - 1 அங்குலம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தே.க.
கொத்தமல்லித் தழை 3 காம்பு
கேழ்வரகு (ராகி)மசாலா இட்லி
ராகி மாவைக் கெட்டியாகக் கரைத்து வை.
உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து ராகி மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வை.
மறுநாள் நன்றாகப் பொங்கியிருக்கும் மாவை இட்லி தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுத்து, ஆறவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வை.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரித்ததும், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து . அதில் பொடியாக நறுக்கி ய குடை மிளகாய், கேரட்,வெங்காயம், இஞ்சித் துண்டு பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி . கொஞ்சம் உப்பு சேர்த்து இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுத்து கடைசியில் . கொத்தமல்லித் தழையை நறுக்கி மேலே தூவி இறக்கு. வேர்க்கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிடு.
Comments