கிருஷ்ணருக்கு பிடித்தமான து
கிருஷ்ணருக்கு பிடித்தமான து
நமக்குத் தேவையான பலகாரங்கள் செய்வதற்காக மாவை மெஷினில் கொடுத்து அரைக்கும்போது மொத்தமாகத்தான் அரைக்க முடிகிறது.
குறிப்பிட்ட பலகாரத்தைச் செய்து முடித்ததும் மீதம் உள்ள மாவை தேவைப்படும்போது உபயோகிக்க முடியுமா’ என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இந்தக் கேள்விக்கான பதில் ‘முடியும்’ என்பதே.
ஒரே ஒரு மாவை அரைத்து வைத்துக்கொண்டு தேன்குழல் அல்லது இனிப்பு மற்றும் காரச்சீடை என்று பலவகை பலகாரங்களைச் செய்யலாம். மாவு தயாரிக்க...
ஒரு கிலோ பச்சரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை ஒரு துணியில் பரப்பி நிழலில் உலரவிடவும். அரிசி முக்கால் பதம் உலர்ந்ததும் இதனுடன் தலா அரை கப் பொட்டுக்கடலை, முழு வெள்ளை உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து மாவு மெஷினில் கொடுத்து மைய அரைக்கவும். மாவை அரைத்து வந்ததும் வெறும் வாணலியில் அரைத்த மாவைச் சேர்த்து வறுக்கவும்.
வறுபடும் மாவைச் சிறிதளவு எடுத்து நீட்டமாகக் கோடு போல் இழுத்தால் மாவு பிசிறு இல்லாமல் கோடு போட வந்தால் அதுவே சரியான பதம். இப்போது மாவைக் கீழே இறக்கி பேப்பரில் கொட்டி ஆறவிடவும். பின்னர் மாவைச் சலித்து டப்பாவில் எடுத்துவைக்கவும். இந்த மாவைக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
தேன்குழல் ஒரு பாத்திரத்தில் அரைத்துவைத்திருக்கும் மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயம், இரண்டு டேபிள்ஸ்பூன் எள் அல்லது சீரகம் அல்லது ஓமம், நான்கு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இதைத் தேன்குழல் அச்சிலிட்டுப் பிழிந்து, தேன்குழல்களாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
தேன்குழல் வேண்டாமென்றால் அரைத்து வைத்துள்ள மாவில் பாதியை இனிப்புச்சீடை செய்யவும், மீதியை காரச்சீடை செய்யவும் பயன்படுத்தலாம்
. இனிப்புச்சீடை ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு அதில் இரண்டு கப் துருவிய வெல்லம், அரை கப் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பின்னர் அரைத்துவைத்திருக்கும் மாவில் பாதி அளவு சேர்த்துக் கிளறவும். மாவு சிறிதளவு வெந்ததும் கீழே இறக்கி மாவை சிறிய சீடைகளாக உருட்டவும். ஒரு பேப்பர் அல்லது துணியில் உருட்டிய சீடைகளைப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து எண்ணெயை காயவைத்து சீடைகளைப் பொரித்தெடுக்கவும். இந்தச் சீடை வெடிக்கவே வெடிக்காது
. காரச்சீடை அரைத்துவைத்திருக்கும் மாவில் பாதி அளவு, ஒரு டேபிள்ஸ்பூன் கொரகொரப்பாகப் பொடித்த மிளகு - சீரகம், மூன்று டேபிள்ஸ்பூன் வெண்ணெய், எட்டு டேபிள்ஸ்பூன் சிறிய தேங்காய்க் கீற்றுகள், ஒரு டீஸ்பூன் பெருங்காயம், தேவைக்கேற்ப உப்பு... இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு கொதிவந்ததும் மாவுக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறவும். மாவு பாதியளவு வெந்ததும் கீழே இறக்கி அவற்றை சீடைகளாக உருட்டி பேப்பர் அல்லது துணியில் 20 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருட்டிய சீடைகளைப் பொரித்தெடுக்கவும். காரச்சீடை தயார்.
ஐந்தே நிமிடங்களில் ருசியான இனிப்பு உருண்டை
ஒரு கப் லேசான அவலையும், 2 ஏலக்காய்களையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள்.அதிலேயே கால் கப் துருவிய வெல்லத்தையும் போட்டு, மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுங்கள். உருண்டை பிடிக்கும் பதத்துக்கு நெய் சேர்த்து, அவல் உருண்டைகளாக செய்து கொடுத்து எல்லோரையும் அசத்தலாம்
பலகாரங்களின் சுவையைக் கூட்ட சில டிப்ஸ்
இதோ... வீட்டிலேயே பலகாரங்கள் செய்தால் என்ன என்று நினைப்பவர்களின் ஆசையைச் சில பலகாரங்களின் சுவை குறைத்துவிடும்
. தட்டை, தேன்குழல், முறுக்கு, சீடைகள், அவல் பலகாரங்களின் சுவையைக் கூட்ட டிப்ஸ் உண்டா என்று நினைப்பவர்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ் இவை
. தட்டை தயாரித்தவுடன் எண்ணெயில் போடுவதற்கு முன்பு தட்டையை 4, 5 இடங்களில் ஃபோர்க்கால் குத்திவிட்டு பிறகு பொரித்தால் எண்ணெய் முழுவதுமாகப் பரவி தட்டை நன்றாக வெந்து கரகரப்பாக, சுவையாக இருக்கும். * தேன்குழல் தயாரிக்கும்போது வெண்ணெயை மாவுடன் சேர்த்துப் பிசைவதற்குப் பதிலாக சூடான எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து தேன்குழல் செய்தால், தேன்குழல் கம்பிகள் எண்ணெயில் பிரியாமல் முழு தேன்குழலாக வரும்.
* முறுக்கு மாவு பிசையும்போது மாவை மொத்தமாகத் தண்ணீர்விட்டுப் பிசைந்து வைத்தால் மாவு புளித்து முறுக்கு சிவந்துவிடும். மொத்த மாவை நான்கு பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்துடன் தேவையான அளவு உப்பு, வெண்ணெய், சீரகம் சேர்த்து அளவாக நீர்விட்டு பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுத்தால் முறுக்கு வெண்மையாகவும், கரகரப்பாகவும் இருக்கும். இதே மாதிரி மீதியுள்ள ஒவ்வொரு பாகத்தையும் தயாரித்து (ஒரு பங்கு தயாரித்து முடித்தவுடன்) எண்ணெயில் பொரித்தெடுக்கவும். * கார முறுக்கு தயாரிக்கும்போது மிளகாய்த்தூள் சேர்த்தால் சிவந்துவிடும். தேவையான மிளகாய்களை (காய்ந்த மிளகாய்) நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து மாவில் சேர்த்துக் கலந்து முறுக்கு பிழிந்தால் முறுக்கு சிவக்காமல் அதிக சுவையுடன் இருக்கும்
. * அவல் பாயசம் செய்யும்போது அவலை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, பாலில் வேகவைத்து சர்க்கரை, ஏலக்காய், உலர் பருப்புகள் வறுத்துச் சேர்த்தால் பாயசம் பார்ப்பதற்கு நன்றாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். * சீடை செய்து துணியில் அரை மணி நேரம் உலர்த்திய பிறகுதான் நிறைய எண்ணெய் வைத்து நிறைய சீடைகள் மூழ்கும் அளவு போட வேண்டும். குறைந்த சீடைகளை நிறைய எண்ணெயில் போட்டால் சீடை வெடிக்கும். சீடைகளை உருட்டும்போது அழுத்தி வழவழப்பாக உருட்டக் கூடாது. லேசாக கைகளால் உருட்டி அப்படியே போட வேண்டும்.
k
மஞ்சுளா யுகேஷ்
Comments