திருத்துறைப்பூண்டியில் போலீசாருக்கு மன அழுத்தத்தை தவிர்ப்பது தொடர்பான மூன்றுநாள் ஆன்லைன் பயிற்சி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் போலீசாருக்கு மன அழுத்தத்தை தவிர்ப்பது தொடர்பான மூன்றுநாள் ஆன்லைன் பயிற்சி
திருத்துறைப்பூண்டி முகாம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.
போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், புஷ்பவள்ளி, எஸ்ஐ தேவதாஸ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். முகாமில் மன அழுத்தம் தவிர்ப்பது, கரோனா ஊரடங்கை எப்படி கையாளுவது, குற்றவாளிகளை எந்த நடைமுறையில் கைது செய்வது, ஆர்பாட்டம், போராட்டம் நடத்துபவர்களை எப்படி கையாளுவது, பொதுமக்களுடன் காவல்துறையினர் எப்படி இணக்கமாக செயல்படுவது என்பது குறித்தும் தியானம், யோகா பயிற்சிகளை சென்னை காவல்துறை பயிற்சி இயக்குனர் அலுவலக பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஒய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் போலீசாருக்கு ஆன்லைன் மூலம் பயற்சி அளித்தனர்.
செய்தியாளர். பாலா
. படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments