ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று
ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று
முதல்முறையாக பெரிய பட்ஜெட் படமாக தயாரிக்கப்பட்ட பெரிய ஸ்டாரான சூர்யாவின் படம் 'சூரரைப் போற்று'.நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே
முதல்முறையாக மிகப்பெரிய தொகைக்கு நேரடி ஓடிடி ரிலீஸூக்கு இந்தப்படம் விற்கப்பட்டிருக்கிறது சூர்யாவின்
கடந்த ஏப்ரல் மாதம் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடி ஓடிடி ரிலீஸுக்கு வாங்கும்போதே அமேசான் நிறுவனம் 'சூரரைப் போற்று' படத்துக்கும் டீல் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டது.
ஆனால், 'சூரரைப்போற்று' நேரடி ஓடிடி ரிலீஸா அல்லது தியேட்டர் ரிலீஸுக்குப் பின் ஒளிபரப்பலாமா என்பதை ஆகஸ்ட்டில் முடிவு செய்யலாம் எனப் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் செப்டம்பரில் தியேட்டர்கள் திறந்தாலும் 40 சதவிகிதம் பார்வையாளர்கள்தான் தியேட்டருக்கு வரமுடியும் என்பதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதற்கு காரணம் இந்த வாரம் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் வாசல்களில் மிகப்பெரிய கூட்டம் கூடும் என எதிர்பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. கொரோனாவுக்கு முன்பு இருந்த விற்பனைக்கூட இப்போது இல்லை எனத் தகவல் வர, தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதியளிக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்த திரையரங்க உரிமையாளர்களே பின்வாங்க ஆரம்பித்துள்ளனர்.
40 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்கள் தியேட்டருக்குள் வரமுடியும். என்ற நிலையில் அந்தப் பார்வையாளர்களும் வெளியே வந்து படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அந்த 40 சதவிகிதக் கூட்டம்கூட தியேட்டருக்கு வருவது சந்தேகம்
இப்படி பல பிரச்னைகள் சினிமா உலகில் விவாதிக்கப்பட்டு கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும்வரை தியேட்டருக்குப் பார்வையாளர்கள் வரப்போவதில்லை என்பதால் ஓடிடி-யிலேயே ரிலீஸ் செய்வதற்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம் என முடிவு செய்துள்ளார் சூர்யா.
2டி தயாரிக்கும் படங்களுக்குத் தனிநபர்களிடம் ஃபைனான்ஸ் வாங்காமல் வங்கிகள் மூலம் மட்டுமே கடன் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார் சூர்யா. 'சூரரைப் போற்று' படத்துக்கு சூர்யாவின் சம்பளம் இல்லாமல், 30- 40 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் எனச் சொல்கிறார்கள்..
சூர்யாவின் சம்பளம் என்பது சில படங்களுக்கு முன்புவரை 15 கோடி ரூபாய் ப்ளஸ் தெலுங்கு உரிமம் என்பதுதான். இதையெல்லாம் சேர்த்தால் சூர்யாவின் சம்பளம் 30 கோடி ரூபாய் வரும் என்பது கணக்கு. ஆனால், இப்போது இந்த 30 கோடி ரூபாயில் சில பல கோடிகளை சூர்யா, நேரடி ஓடிடி ரிலீஸுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது.
''என்னுடைய சம்பளத்தை வைத்து லாபக்கணக்குப் பார்க்கவேண்டாம். எனக்கு சம்பளத்தில் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. படத்துக்குச் செலவு செய்த பணத்தைவிட நல்ல விலைக்கு கேட்டால் ஓகே'' என சூர்யா சொல்ல, அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் 'சூரரைப் போற்று' படத்தை அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டிவி ஒளிபரப்பு உரிமம் தமிழில் சன் டிவிக்கும், தெலுங்கில் ஜெமினிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்கும் எனத்தெரியவருகிறது. இந்தி உரிமத்தையும் பாலிவுட்டின் முன்னனி இளம் நடிகர் கேட்டுக்கொண்டிருப்பதால் அங்கேயும் நல்ல விலைக்கு விற்கப்படும் என்பதால் 'சூரரைப் போற்று' சூர்யாவுக்கு நல்ல லாபம் என்பபேத இப்போது பேச்சு.
இந்த லாபத்தில் இருந்துதான் 5 கோடி ரூபாயை ஒதுக்கி கல்வி உதவிகள் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார் சூர்யா.
அமேசான் நிறுவனம் ப்ரமோஷனுக்கு மட்டும் 1 மாதம் வேண்டும் என்று, படத்துக்கான ப்ரமோஷன் பிளானை சொல்லியிருக்கிறது. அதனால்தான் படம் அக்டோபர் 30 அன்று வெளிவரும் என இப்போதே அறிவித்துவிட்டார்கள் என்கிறார்கள்
Comments