ரவீந்திரநாத் தாகூர்
இன்று. ஆகஸ்ட்7-1941ம் ஆண்டு இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore)அவர்களின் 79வதுநினைவுநாள்
சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார் இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.
இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர்16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்கதேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Comments