கோகுலாஷ்டமி_என்றைக்கு
கோகுலாஷ்டமி_என்றைக்கு...?
ஶ்ரீகிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி (கோகுலாஷ்டமி) இந்த மாதம் 11ஆம் தேதி பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் சாஸ்திர நெறிமுறைகள் தவறாது பின்பற்றுபவர்கள் அடுத்த மாதம் 10-ஆம் தேதியே கோகுலாஷ்டமி_ ஆவணி மாதம் அஷ்டமி. தூதி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வருகின்ற நாளிலேயே கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவர். ஆனால் நாட்காட்டியின்படி. பண்டிகைகளைக் கொண்டாடுவதே பெரும்பாலானோரின் வழக்கம்.
பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நம் வீட்டிற்கு சிறு பாலகனாக வந்து அருள்புரிய வேண்டும்! என்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
எனவே தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று விட்டை சுத்தம் செய்து, அரிசி மாவினால். அழிகிய கோலங்களையிட்டு, மாவிலைத் தோரணங்களால் அழகு படுத்தி, வாசல் தொடங்கி பூஜையறை வரை குட்டிக் கண்ணனனின் பிஞ்சு பாதங்களை அரிசி மாவில் வரைகின்றனர்.
ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களால் அடி மேல் அடி வைத்து. நம் வீட்டிற்கும் வருவதாக ஐதீகம். கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மலர் மாலைகளைச் சூட்டி, கிருஷ்ணருக்குப் பிடித்த வெண்ணெய், இனிப்பு வகைகள், பால், தயிர் என்று வைத்து பூஜைகளைச் செய்வர்.
அந்த நீலவண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய வேண்டும்! என்று மனதார வேண்டி, அனைத்து மக்களிடமும், உயிர்களிடமும் கருணையோடும், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய குணங்கள் இன்றியும் நாம் நடந்துகொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் அருளை வெகு சுலபமாக நம்மால் பெற முடியும். கிருஷாண பரமாத்மாவை வழிபட்டால் எல்லாவிதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும்! என்று ஆண்டாள் நாச்சியாரின் திருவாக்கு.
இம்முறை என்றைக்கு கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவது? எனக் குழம்பாமல், இம்மாதம் 11 ஆம் தேதியும் கிருஷ்ணரின் ஜெயந்தியைக் கொண்டாடலாம். அடுத்த மாதம் பத்தாம் தேதியும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜெயந்தியைக் கொண்டாடலாம். அல்லது இந்த மாதம் பதினொன்றாம் பத்தாம் தேதியிலிருந்து அடுத்த மாதம்
10 ஆம் தேதி வரையும் கூட ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தியைக் கொண்டாடலாம். நம் செல்லமான குட்டிக் கண்ணனின் ஜெயந்தியை ஒரு மாதம் கொண்டாட முடியுமானால் அதுவே நமது பெரும் பாக்கியமாகும்.
Comments