இயற்கை வளங்களை பாதுகாக்க விதை பந்துகளை வழங்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் இளங்கோ அவர்களின் மகன் ஜனா இவர் வாணியம்பாடியில் உள்ள வாணி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்
இவர் இயற்கை வளங்களை பாதுகாக்க விதை பந்துகளை அவ்வப்போது வழங்கிவருகிறார்
ஏற்கனவே இவர் 5000 விதைப்பந்துகள் வழங்கி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு சிவனருள் அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றார்
மீண்டும் 15.8.2020 இன்று 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புத்துக்கோயில் கிராமத்தை சுற்றியுள்ள விவசாய மக்களுக்கு 500 விதைப்பந்துகள் வழங்கினார்
இதுவரை சுமார் ஆராயிரம் விதைப்பந்து வழங்கி இருக்கிறார் விதைப்பந்துகள் பெற்றுக்கொண்டு விவசாயிகள் இவருக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர். வாணியம்பாடி சுரேஷ்
Comments