ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம்
திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளான
அரசலடி, பர்மா காலனி மற்றும் வீரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் விதமாக சுமார் 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் ஆகியவற்றை திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில்
வழங்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல்
தடுத்திட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கபசுர துடிநீர் அருந்துவதால் ஏற்பட கூடிய நன்மைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், நகராட்சி சுகாதார ஆய்வளார் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர். பாலா, மு. அமிர்தலிங்கம்
Comments