12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டிக் கொடுத்த மோப்ப நாய்
12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியைகாட்டிக் கொடுத்த மோப்ப நாய்ஜூலை 20, 2020 08:23 12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து சென்று, கொலையாளியை மோப்ப நாய் காட்டி கொடுத்தது. அந்த மோப்ப நாய்க்கு போலீஸ் அதிகாரி மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மோப்ப நாய் துங்காவுக்கு மாலை அணிவித்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பரிவுடன் தடவி கொடுப்பதை படத்தில் காணலாம். பெங்களூரு:
அப்போது திருட்டு நகைகளை பங்கு பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் சந்திரா நாயக்கை, சேத்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் துங்காவை பராமரித்து வரும் சிவநாயக்கா என்பவருக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். இதுகுறித்து சிவநாயக்கா கூறும்போது, பொதுவாக மோப்ப நாய்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் தான் மோப்பம் பிடித்து ஓடும். ஆனால் துங்கா 12 கிலோ மீட்டர் மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடிக்க உதவி செய்து உள்ளது. துங்கா சிறப்பு வாய்ந்த மோப்ப நாய். துங்காவால் இன்னும் 15 ஆண்டுகள் போலீஸ் துறையில் சேவை செய்ய முடியும் என்றார்.
கூடுதல் டி.ஜி.பி. முகக் கவசம் அணியவில்லையே அவர் மேல் யார் நடவடிக்கை எடுப்பது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்பாவி பொதுமக்களுக்குத்தான் அந்த உபதேசம் எல்லாம். ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள், வாகனத்தைப் பறி முதல் செய்வார்கள், அபராதமும் வதிப்பார்கள். முக்க் கவசம் அணியாமல் நடமாடினால், தண்டனை அளிப்பார்கள். ஆனால், அத்துறையின் உயர் அதிகாரிகள் அப்படி நடந்து கொண்டால், யார் நடவடிக்கை எடுப்பது என்று யாரைக் கேட்பது? |
Comments