பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அரசு உத்தரவு
பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்அரசு உத்தரவுஜூலை 24, 2020 புதுடில்லி: இராணுவத்தில், பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர ஆணையம் அமைக்க, இராணுவ அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு துறையில், 'ஷார்ட் சர்வீஸ் கமிஷன்' மற்றும் 'பெர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்' என்ற இரு ஆணையங்களின் கீழ், குறுகிய காலம் மற்றும் நிரந்தர பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், பெண்கள் குறுகிய காலம் மட்டும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஆண்கள், நிரந்த பணிகளின் கீழ், ஓய்வு காலம் வரை பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எட்டு பெண் இராணுவ அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், 2010ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 'ஆண்களுக்கு நிகராக, பெண்களும் ஓய்வு காலம் வரை நிரந்தரமாக பணியாற்ற, பெண்களுக்கு நிரந்தர ஆணையம் உருவாக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இனி, இராணுவ வான் தடுப்பு பிரிவு, சிக்னல், பொறியாளர்கள், இராணுவ விமான போக்குவரத்து, மின்னணு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள், இராணுவ பீரங்கிப் பிரிவு, இராணுவ சேவை பிரிவு, உளவு பிரிவு உள்ளிட்ட, 10 பொறுப்புகளிலும் பணியமர்த்தப்படுவர். இப்பொறுப்புகளுக்கு, குறுகிய கால பணியில் உள்ள இராணுவ பெண் அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, தேர்வு வாரியம் பரிசீலித்து, தகுதியானோருக்கு புதிய பொறுப்புகளை ஒதுக்கும் என்று கூறினார். |
Comments