திரைப்பட நடிகர் என்.எம் பாலு தனது சொந்த கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த கிராம மக்களுக்கு ரூ 3 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை திரைப்பட நடிகர் என்.எம் பாலு அவர்கள் வழங்கியுள்ளார்
திரு என்.எம் பாலுவின் சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள மேல்கரிப்பூர் ஆகும்
இவருடைய சொந்த ஊரில் தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் ஊரடங்கினால் கூலித்தொழிலாளர்கள் எந்த வேலையும் மற்றும் எந்தவருமானமின்றி அன்றாட உணவுக்கு எந்த வழி வகையின்றி தவித்து வருகின்றார்கள்
வசதி படைத்தோர் இவர்களுக்கு அவ்வபோது உணவு பொருட்களை வழங்கி வருகின்றார்கள் .இருந்தாலும் தொடரும் ஊரடங்கு அவர்களின் அன்றாட தேவையை நிவர்த்திக்கவில்லை
அந்த வகையில் திரைப்பட நடிகரான திரு என் .எம் . பாலு தனது சொந்த ஊர் மக்களுக்கு ரூ 3லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை சுமார் 250 குடும்பங்களுக்கு வழங்கி அந்த ஊர் மக்களால் பெரிதும் பாராட்டி பேசப்பட்டு வருகிறார்
இவர் சொந்தமாக தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் பெயர்
ஐராவதம் எனும் படமாகும்
கொரானாவின் தாக்குதலினால் இத்திரைப்படம் வெளி வராத சூழ்நிலையில் உள்ளது
திரைப்படத்துறையில் வந்து சாதிக்கும் முன்பே இப்படிப்பட்ட நல்ல செயல்களினால் அனைவராலும் பாராட்டு பெற்று பேசப்பட்டு வருகிறார்
இவருக்கு பீப்பிள் டுடே பத்திரிகை சார்பாக வாழ்த்துகள்
Comments