யோகாசன தினம்
யோகாசன தினம்
The world's shortest woman Jyoti Amge and Yoga exponent Dhanshri Lekurwale practice ahead of the 5th International Day of Yoga 2019, in Nagpur
2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் யோகாவின் பெருமைகள் குறித்து பேசிய பிரதமர், அதை சர்வதேச அளவில் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அதிகாரபூர்வமாக அறிவித்ததை பின்பற்றி உலக நாடுகளில் யோகாசனம் குறித்த விழப்புணர்வு ஏற்பட்டு முகாம்கள் நடைபெற்று வருகின்ன.
கொரனா என்ற தீ நுண்மியின் தாக்கம் 121 நாடுகளைப் பாதித்து, சுமார் 5 இலட்சம் உயிர்களை பலிவாங்கி, கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, மனித சமுதாயத்தை நிர்க்கதியாக்கி, அன்றாடம் பயத்திலும், திகிலிலும் வாழ்க்கையைக் கடத்தும் இன்றையதினம் அவரவர் வீட்டிலிருந்தே எளிய யோசான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
யோகா பற்றி சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை சித்தரிக்கின்றன.. இந்து தத்துவத்தின்படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது.
பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (c. 3300- 1700 B.C.E) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன
யோகா என்ற சொல் கதா உபநிடதத்தில் ஐம்புலன்களை அடக்கி, மற்றும் மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோக நிலையை அடைவதைபற்றிக் குறிப்பிடுகிறது.
டெல்லியிலுள்ள பிர்லாமந்திரில் இருக்கும் ஹிந்து யோகியின் சிலை
முறையான யோகசாஸ்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை பதஞ்சலியையே சாரும் என பெரும்பாலோர் கருதுகின்றனர். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் 185 சுருக்கமான சூத்திரங்களை கொண்டுள்ளது.
அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன. இந்த எட்டு-அங்க யோகா தத்துவம் 29வது சூத்திரம் 2வது புத்தகத்தின் சூத்திரம்தான் இன்று நடைமுறையில் இருந்து வரும் ஒவ்வொரு ராஜ யோகத்தின் ஆழ்ந்த குணாதிசயத்தைக் காட்டுகிறது.
யோகத்தின் எட்டு அங்கங்கள்
- இயமம் ( 5' பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .
- நியமம் (5 கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
- ஆசனம் - அமர்தல் அல்லது உடலின் நிலை.
- பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்) ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
- ப்ரத்யாஹரம் (தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
- தாரானை (மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப்படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப்படுத்துதல்.
- தியான ம்(தியானம்) தியானத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
- சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.
தியானிப்பதற்கும், வணங்குவதற்கும் இதயத்திற்குள் உள்ள சக்கரத்துக்குள் கடவுளைக் கொண்டு வரும் நோக்குடன் செய்யப்படும் ஒரு வகை தான் குண்டலினி யோகா.
ஜப்பான் நாட்டிள் காமகுராவிலுள்ள யோகநிலையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை
கயோட்சர்க நிலையில் யோக தியானம் புரியும் திர்தங்கர பர்சவா
முலபந்தனா நிலையில் மஹாவீராவின் கேவல ஞானா
யோகப்பயிற்சி மிகப்பழங்காலத்திலிருந்தே பாரதநாட்டில் யோகிகளால் பின்பற்றப்பட்டு வருவதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திக கிடைக்கும் என்பது யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.
பதினெட்டு யோகஸித்திகளும் பலன்களும்
குண்டலினி யோகா குறியீடு
- பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதை நிலைநிறுத்தி தியானிப்பதால் ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
- ’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘மஹிமா’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
- பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘லகிமா’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
- பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’பிராப்தி’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
- பிறப்பு இறப்பு இல்லாத பகவானின் ’மஹத்’ எனும் தத்துவமே ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில் மனதை நிலைபெறச் செய்பவர்கள் ‘பிராகாம்யம்’ எனும் சித்தி பெற்ற யோகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை தாங்குகிறார்.
- முக்குணமயமான மாயைக்கு அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘ஈசித்வம்’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
- பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், இரண்யகர்பன், அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையான துரிய நிலையில் பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு ‘வசித்துவம்’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
- நிர்குணபிரம்மத்தில் (அருவ நிலை) மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து “காமா வஸாயிதா” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
பதஞ்சலி முனிவர் சிலை, ஆதிசேஷனின் மறு அவதாரம்
- ஆகாயத்தை இறைவனாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
- தன் கண்களில் சூரியனையும், சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் இறைவனை தியானம் செய்பவனுக்கு, உலகம் முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.
- மனதை உபாதான காரணமாகக் கொண்டு, எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும் வடிவத்தை அடைகிறான்.
- தான் விரும்பும் காலத்தில் மரணமடைய விரும்பும் யோகி, குதிகாலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை, இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர் ’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக உயிரை வெளியேற்றி துறக்க வேண்டும். இச்சக்திக்கு கபால மோட்சம் என்பர்.
- மனம், உடல், அதில் உறையும் வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து அதன் மூலம் யோகி தான் விரும்ம்பும் இடத்திற்கு அந்த விநாடியே சென்றடைகிறான்.
- தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை ’கூடு விட்டு கூடு பாய்தல்’ என்பர்.
Comments