இதுதான் காதலா
(கவிதை பக்கம்)
இதுதான் காதலா
அம்மாவிடம் அடம் பிடித்து
ஓடி வரும் குழந்தை போல
உன்னிடம் அடிக்கடி
ஓடி வந்துவிடுகிறது
என் மனம்
உன் நினைவுகளை
எட்டி தூர வைத்தாலும்
ஏதாவது ஒரு மூலையில்
முட்டி முளைக்கின்றது
உன் நினைவுகள்
உன் வழுவழுப்பான
வரிகளை
வாசிக்க வாசிக்க
வழுக்கி வழுக்கி விழுகிறது
என் கண்கள்
முற்றுப்புள்ளியே
இல்லாத
உன் முத்தத்தில் தான்
மூச்சு வாங்குகிறது
என் இதயம்
முத்தமிட்டபடியே இரு
மூச்சு வாங்கிக் கொண்டே
இருக்கிறேன்
நான்
கவிஞர் கவி செல்வா என்கிற செல்வராணி( திருச்சி).
(விரைவில் வெளியிடப்படும் தனது நூலில் இருந்து உங்கள் பார்வைக்கு)
தனது இக்கவிதையை பதிவிட அனுமதித்த அவருக்கு மிகவும் நன்றி
ஆசிரியர்.
Comments