Posts
Showing posts from June, 2020
59 செயலிகளுக்கு தடை சீனா கவலை
- Get link
- X
- Other Apps
59 செயலிகளுக்கு இந்தியா தடை சீனா கவலை புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது கவலை அளிப்பதாகவும், அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்தன. இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாவ் லிஜியான் கூறியதாவது: இந்திய அரசின் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. இந்த உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் சீனாவின் வணிகத்தை பாதுகாக்க வேண்டியது அந்நாட்டு அரசின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம்
- Get link
- X
- Other Apps
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவது ஏன் ? 30-05-2020 . கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன் ? கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம் இருக்கதான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்றுதான். வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில் அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லதுதான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம் , அங்காடி , பூங்கா போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை க...
தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி
- Get link
- X
- Other Apps
தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி ஜூன் 30, 2020 தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால், சின்ன உருளைக்கிழங்கு - தலா ஒரு கப், வெங்காயம் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள். சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வை. அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வை. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கு. வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கு. பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, த...
ஆனி திருமஞ்சனம்
- Get link
- X
- Other Apps
ஆனி திருமஞ்சனம் - நடராஜர் அபிஷேகத்தை தரிசித்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் சிதம்பரம்: அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன . நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆ...
தொற்றை எதிர்த்து போராட
- Get link
- X
- Other Apps
வைரஸ் தொற்று நுரையீரலில் பரவும் போதுதான் , அதிகமாக உயிரிழப்பு நிகழும் என்றாலும் , நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன்மூலம் , தொற்றை எதிர்த்து போராட முடியும். சில உணவுகளை சாப்பிடுவது , நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும். டாக்டர் ஆர்.மைதிலி , ஆயுர்வேத மருத்துவர் , சென்னை பூண்டு பூண்டை நம் அன்றாட உணவில் அளவோடு சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்க முடியும். பூண்டில் இருக்கும், 'அலிசின்' என்னும் இயற்கையான ஆன்டிபயாடிக் சத்து, நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆகவே, நம் உணவில் தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சேர்த்துக் கொள்வது, நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரும். இஞ்சி இஞ்சியில் உள்ள, 'ஜிஞ்சரால்' என்னும் பொருள் தான், இதன் வித்தியாசமான சுவைக்கு காரணம். இந்த ஜிஞ்சரால், சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் குணமுடையது; நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இஞ்சியை நசுக்கிய பின், அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வ...
மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
- Get link
- X
- Other Apps
நீச்சல் அடிக்கும்போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது டாக்டர்களின் தீவிரமுயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது. 30-05-2020 புனோம் கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது அவர் உறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து அவரது உறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்...
ஊரடங்கு எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை : தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், 15 நாட்களுக்கு, பஸ் போக்குவரத்து கிடையாது. இம்மாதம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில், டீக்கடை, உணவகங்கள் செயல்படும். நோய் பரவல் அதிகம் உள்ள, ஐந்து மாவட்டங்களில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: * கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், இன்று இரவு முடிவடைய உள்ள ஊரடங்கு, அடுத்த மாதம், 31ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது . * சென்னை முழுவதிலும் மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில்,...
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி
- Get link
- X
- Other Apps
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி 30-5-2020 இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்து புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இ...
ஆத்தி சூடி (நெ) * நெற் பயிர் விளை * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
- Get link
- X
- Other Apps
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு
- Get link
- X
- Other Apps
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ஜூன் 29, 2020 ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு தேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை - 1 கட்டு மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கரம் மசாலா தலா - 1 தேக்கரண்டி -ஏலக்காய் - 4 கிராம்பு - 3 பட்டை - 1 இன்ச் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது செய்முறை : புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள். வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக் கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி நன்றாக மசித்துகொள். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற...
சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி
- Get link
- X
- Other Apps
சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி நியாயம்? - ப.சிதம்பரம் 29-06-2020 ப.சிதம்பரம் புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீயும், இந்திய பிரத...
நீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.
- Get link
- X
- Other Apps
நீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம். ‘தோஷம்’ என்பது ‘குற்றம்’ என்ற வார்த்தையை குறிக்கின்றது. பிரதோஷம் என்றால் குற்றம் இல்லாத வாழ்க்கை என்பதை குறிக்கும். குற்றமற்ற இந்த பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் இதன் பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலத்தை தான் ‘உஷத் காலம்’ என்று கூறுவார்கள். இந்த சமயத்தில் அதிதேவதையான உஷாதேவி சூரியனின் மனைவியாக இருப்பாள். இதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலத்தில் பிரதியுஷா மனைவியாக இருப்பாள். இந்த நேரம் பிரத்யுஷத் காலம் என்று கூறப்படுகிறது. பிரத்யுஷத் காலம் என்று கூறப்பட்ட இந்த காலம் பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் என்று மாறிவிட்டது. இந்தப் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் இன்னல்களானது தீரும் என்பது நம்பிக்கை. நம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரதோஷ சமயத்தில் ஒருமுறை நமது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபடுவதும் நல்லது. பிரதோஷ காலத்தில் அந்த சிவபெருமானின் ஆ...
பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்' : 'சொமேட்டோ' பணியாளர்கள்
- Get link
- X
- Other Apps
'பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்' : 'சொமேட்டோ' பணியாளர்கள் 28-06-2020 கோல்கட்டா: 'சொமேட்டோ' ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தில் சீன நிறுவனம் முதலீடு செய்துள்ள காரணத்தால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் எதிரப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2008 ம் ஆண்டு ஹரியானாவின் கிர்கானை தலைமையகமாகக் கொண்டு 'சொமேட்டோ' நிறுவனம் துவங்கப்பட்டது. பங்கஜ் சட்டா மற்றும் திபீந்தர் கோயல் என்ற இருவர் இந்த நிறுவனத்தை துவக்கினர். தற்போது இது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனமாக உள்ளது. 2018 ம் ஆண்டு சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆன்ட் பினான்ஸியல் நிறுவனம் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தில் 14.7 சதவீத பங்குகளையும் அலிபாபா நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் லடாக்கில் நமது ராணுவ வீரர்கள் சீனர்களுக்கு எதிரான சண்டையில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியாவில் சீன பொருட்களுக்கும், சீன நிறுவனங்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீன நிற...
ஆத்தி சூடி (நூ) * நூல் பல கல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
- Get link
- X
- Other Apps
CARROT HALWA ( SOUTH INDIAN STYLE )
- Get link
- X
- Other Apps
alexandmerlyn kitchen receipes today CARROT HALWA ( SOUTH INDIAN STYLE ) INGREDIENTS Carrots - 2 Thick Coconut Milk - 1 cup Full Fat Milk - 1/2 cup Sugar - To Taste Cardamom Powder - 1 Tsp Condensed Milk - 1/2 cup Ghee - 2 Tbsps Almonds & Pistachios - 2 Tbsps METHOD Clean remove skin and grate the carrots In a pressure cooker add in the ghee and sauté the grated carrots When it’s fragrant add in the coconut milk and pressure cook until soft In a pan add in the pressure cooked carrots and simmer until almost all the liquid is absorbed Add in the full fat milk and simmer until the mixture is semi dry Add sugar to taste condensed milk and cardamom powder Sauté in low flame until the mixture leaves the sides of the pan and the ghee floats on top Add in some of the chopped nuts and mix well Garnish with the remaining almonds and pistachios Serve warm with vanilla ice cream if liked Notes: Adj...
மூக்கடைப்பு உடனடியாக சரியாக
- Get link
- X
- Other Apps
டாக்டர் ரேவதியின் இயற்கை வைத்தியம் இன்று மூக்கடைப்பு உடனடியாக சரியாக | Immediate Relief for Nasal Congestion | அறிவோம் அக்குபிரஷர் by Dr.S.Revathi's Vlog Arivom Acupressure #1 - Immed iate Relief for Nasal Congestion or Nasal Blockage அறிவோம் அக்குபிரஷர் #1 - மூக்கடைப்பு உடனடியாக சரியாக #Acupressure #NasalCongestion #மூக்கடைப்பு
ஆத்தி சூடி (நு) * நுண்மை நுகரேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
- Get link
- X
- Other Apps
ஆத்தி சூடி (நு) * நுண்மை நுகரேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா * ஒலி ஒளி உணர மற்றவர் நுண்மை (இரகசியம்) மனத்தால் அறிபவர் கற்றவர் போலே கசட்டை (குற்றம்) விலக்கிட உற்றவர் ஏற்ற உகவை (மகிழ்ச்சி) உரைத்திடும் ஏற்றமும் (மனத்துணிவு) நீக்கல் எழில். * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி Welcome to Padam Eppadi Irukku! Here...
இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம் வாஷிங்டன்: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே, அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பருக்கும், சிங்கப்பூர் ராணுவ அமைச்சர் எங் ஹென்னுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, சிங்கப்பூரின் குவாம் என்ற இடத்தில், அமெரிக்காவின் போர் விமான பயிற்சி மையம் அமையவுள்ளது. இதைப் பின்பற்றி, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்ட அனுமதி பெறும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறி வைக்கிறது, சீனா
- Get link
- X
- Other Apps
இ ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறி வைக்கிறது , சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம் லடாக்கை தொடர்ந்து இராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறி வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது. ஜூன் 27, 2020 ஜெய்சால்மீர், இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கில் சீனா வாலாட்டியது. இதைத் தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்த எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்தப் பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. அதை சாக்காக வைத்து, அங்கு விமான நிலையம், ரெயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை இராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிற...
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள்
- Get link
- X
- Other Apps
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள் ஜூன் 27, 2020 08:47 வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும் , யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்களை பார்க்கலாம். புஜங்காசனம் , தனுராசனம் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். புஜங்காசனம் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும். முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் ...
கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க
- Get link
- X
- Other Apps
கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம் 26-06-2020 12:52 கர்ப்பிணிகள் 9- வது மாதத்தில் இந்த உணவுகளை சாப்பிடலாம் கர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றைத்தான் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். தானியங்களில் போலிக் அமிலம் (வைட்டமின் – பி) அடங்கியிருக்கிறது. இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகையை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை எடுத்து கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்குத் தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்தப் பழங்கள் எல்லாவித ஊட்டசத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்குப் பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலைப் போக்க ப...