ஊரடங்கு குறித்து விளக்கம் கேட்கிறது
ஊரடங்கு குறித்து விளக்கம் கேட்கிறது பார்லி., நிலைக்குழு
27-05- 2020 21:32
புதுடில்லி: ஊரடங்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு, உள்துறை செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளது
வரும் ஜூன் மாதம் 3ம் தேதி பார்லி., நிலைக்குழு கூட உள்ளது. குழுவின் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா கூட்டத்தை கூட்டியுள்ளார்,
மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments