டாஸ்மாக் மதுபானங்களை வாங்குவதற்காக மதுப் பிரியர்கள் நீண்ட வரிசை
தமிழக அரசு அறிவித்தபடி இன்று மதுபான கடைகள்காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது மதுபானங்களை வாங்குவதற்காக மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் செல்லும் வழியில் கூட் ரோடு பகுதியில் இருக்கும் மதுபான கடை இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது மதுபானங்களை வாங்குவதற்கு மதுப் பிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் இவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி மற்றும் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று கூறி நீண்ட வரிசையில் தடுப்பு களுக்கு இருபுறமும் நிற்க வைத்து வரிசையாக சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர் மதுப் பிரியர்கள் ஆதார் கார்டு காண்பித்து டோக்கனை பெற்று மதுபானங்களை வாங்கி சென்றனர்
. செய்தியாளர். கணபதி. தர்மபுரி
Comments