இன்றைய இலக்கிய சோலை பாடல்.
இலக்கியச்சோலை 8
½ நூற்றாண்டுக்கு முன்னால் (1962) வெளி வந்த ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படித்தால் மட்டும் போதுமா படத்தில் பாலாஜி, சிவாஜி கணேசன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். இருவருக்கும் திருமணம் செய்ய தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள்.
அண்ணனும் தம்பியும் ஆற்று நீரில் தாங்கள் பார்த்த பெண்களைப் பற்றி விவரிக்கும் பாடல்தான். இன்றைய இலக்கிய சோலை பாடல்.
.
பாடல் வரிகள்
- பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா - நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடி இடையால்
துவண்டு விழும் கொடி இடையால்
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ
சென்றேன் ஹ்ம்ம்
கண்டேன் ஹும்ஹும்
வந்தேன் - பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா - நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன் ஹ்ம்ம்
கண்டேன் ஹும்ஹும்
வந்தேன் - பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
- படம் : படித்தால் மட்டும் போதுமா (1962)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் & இராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்
செஏ துரைபாண்டியன்
பாடலைக்காண
Comments