கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாராக வேண்டும்
கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாராக வேண்டும் - பிரதமர் மோடி
பதிவு: மே 12, 2020 20:12 PM
புது டெல்லி,
கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தி 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது.
இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது
* இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்ன மாக்கியிருக்கிறது
* ஒரே வைரஸ் நம்மை வெகுவாக பாதித்துள்ளது.
* இதுபோன்ற உலகளவிய பொது முடக்கம் இதற்கு முன்பு உலகம் காணாதது
* கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது.
* கொரோனா வைரஸில் இருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சித்து வருகிறது.
* கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்துள்ளனர்.
* 4 மாதங்களில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
* கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாராக வேண்டும்
* வைரசுக்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.
* தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாசாரம்
* இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.
* கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர்.
* இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம்
* உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது
* தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது
* y2k பிரச்சினையை எப்படி கடந்து வந்தோமே அதேபோல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்
* இந்தச் சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக் கொண்டிருக்கிறது.
* உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும்.
* உலகம் என்பது ஒரே குடும்பம்தான் என்பது இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலமில்லை.
* யாரையும் சார்ந்திராமல் தன்ன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
* தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும்.
* எந்த ஒரு இலக்கையும் அடைவது சாத்தியமில்லை என்பதே இந்தியாவுக்கு இல்லை.
* இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது.
* மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது.
* இந்தியாவின் வளர்ச்சியில் 5 முக்கிய அம்சங்களை கொண்டது.
* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.
* எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
* உள்ளூர் உற்பத்தி, விற்பனை விநியோகம் இவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
* எதிர்வரும் நாட்களில் இந்த்தி திட்டம் பற்றி நிதியமைச்சர் விரிவாக அறிவிப்பார்.
* இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக ஏழைகளின் பைகளுக்குச் செல்கிறது.
* நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18 க்குள் உங்களுக்குள் தெரிவிக்கப்படும்
* மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.
செஏதுரைபாண்டியன்
Comments