|
சிவபெருமானின் திருவடிவங்கள் எனப்படும்
மூர்த்தங்கள் 64 என்று சொல்லப்படுகிறது.
அவற்றுள் முக்கியமான
மூர்த்தங்களாக 25 மூர்த்தங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
·
அவை:- சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாண சுந்தரர், சந்திரசேகரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தரதாரி, திரிபுராரி, கஜாரி, வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நீலகண்டர், கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேஸ்வரர், ஏக்பாதர், லிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், ஹரிஹரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய உருவங்கள். இந்த 25 மூர்த்தங்களும், சிவபெருமானின் 5 முகங்களாக விளங்கும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து பிறந்தவை என்று சிவ ஆகமங்கள் எடுத்துரைக்கின்றன. இந்தப் பகுதியில் ஈசான முக மூர்த்தத்தில் இருந்து வெளிப்பட்ட 5 வடிவங்களாவன
நடராஜர் பஞ்சாட்சரத்தையும், பஞ்ச கிருத்தியங்களையும் நிதர்சனமாக விளக்க வந்த வடிவம் இது. எல்லா சிவாலயங்களிலும் ஆனந்த தாண்டவ கோலத்தில் வீற்றிருப்பவர், நடராஜா். இவருக்கு ஐந்து சபைகள் உள்ளன. அவற்றில் பொற்சபை என்று அழைக்கப்படும் பொன்னம்பலம், சிதம்பரத்தில் உள்ளது.
சோமாஸ்கந்தர் சத்து, சித்து, ஆனந்தம் என்ற இயல்பான நிலையை உணர்த்து வதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே, இந்த சோமாஸ்கந்தர் வடிவமாகும். முதலாவதாக சத்தாக சிவனும், நடுவில் சித்தாக முருகனும், இறுதியில் ஆனந்த வடிவில் அம்பாளும் இணைந்து இருப்பதே இந்த மூர்த்தத்தின் சிறப்பு. சிவாலயங்களில் முதன்மையான மூர்த்தியும் இதுவே.
கல்யாண சுந்தரர்
இமவானின் மகளான பார்வதியை திருமணம் செய்து கொண்ட கோலத்தில் சிவபெருமான் காட்சி தரும் வடிவமே, கல்யாண சுந்தர மூர்த்தி வடிவமாகும். இந்த திருவுருவத்தை, திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் நாம் கண்டு தரிசிக்கலாம். சந்திரசேகரர் மூன்றாம் பிறை சந்திரரை, தன் ஜடாமுடியில் சூடி, சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்தவரே, சந்திரசேகரர் ஆவார். உமாதேவியருடன் இணைந்து நின்ற நிலையில் இவரது திருவுருவம் பல கோவில்களில் இடம்பெற்றிருக்கும். ரிஷபாரூடர் தர்மத்தின் வடிவமாக விளங்கும் காளியின் மீது அமர்ந்து காட்சி தரும் கயிலைநாதன் தான், ரிஷபாரூட மூர்த்தியாக கருதப்படுகிறார். இந்தக் கயிலைக் காட்சியைக் காணவே, சிவபெருமானின் அடியவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள். இந்தப் புனித காட்சிக்கு பெயர்போன இடம், நான்மாடக்கூடலாகிய மதுரையாகும்,
இப்பொழுது உலக மக்களையே ஊரடங்கு என்ற பெயரில் தனிமைப்படுத்தி, பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோய் மொத்த உலகத்திலிருந்து விலகினாதான் மக்கள் ஆலயங்களுக்கும் செல்ல முடியும் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
நீங்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே மனதளவிலேயே சிவனைக் காணுங்கள், உங்களுடைய குறைகள் தீரும் என்று மனதார நம்புங்கள்
.
| |
Comments