தமிழகத்தில் முதன்முதலில் மின்கம்பம் ஏறிய பெண்
தமிழக மின்வாரியத்தில் ஐந்தாயிரம் `கேங்மென்’ பணியிடங்கள் காலியாக இருந்தபோது மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த அந்தப் பணிக்கு சேலம் உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பத்துக்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்துகொண்டார்கள்.
30 மீட்டர் உயரமான மின்கம்பத்தில் 8 நிமிடங்களில் ஏற வேண்டும். அந்தப் பெண்ணோ, 6 நிமிடங்களில் ஏறி அசத்துகிறார்.
அதேபோல 31.5 கிலோ மின்சாதனங்களைத் தூக்கிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 100 மீட்டர் கடக்கவேண்டிய தூரத்தை 46 நொடிகளிலேயே கடக்கிறார். 2 நிமிடங்களில் இணைக்கவேண்டிய உயர் மின் அழுத்தக் கம்பிகளை 1.46 நிமிடங்களில் இணைத்து அனைவரது பாராட்டுகளையும் பெறுகிறார் லதா, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகிலுள்ள அமரம்திட்டு சேவிவளவு பகுதியில் வசித்து வந்த தமிழகத்தில் முதன்முதலில் மின்கம்பம் ஏறிய பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
அரசுப் பள்ளியில படிக்கும்போது, ’ஆண்களுக்கு இணையா நீங்களும் வேலைக்குப் போனால்தான் மதிப்பா பார்க்கப்படுவீங்க’ன்னு என் ஆசிரியர் சொன்னது மனதில் பதிஞ்சுபோச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நிறைய தேர்வுகள்ல கலந்து கிட்டேன். ஆனா, உயரம் ஒரு குறையா இருந்தது. அப்போதான் மின்வாரியத் துறையில் கேங்மென் பணிக்கு அஞ்சாயிரம் பேர் தேவைங்கற அறிவிப்பு வந்தது. ஏப்ரல் மாதம் விண்ணப்பிச்சேன். முதலில் பெண்கள் அரைக் கம்பம் ஏறினால் போதும் என்று சொல்லியிருந்தாங்க. எனக்கு மின்கம்பம் ஏறி பழக்கமில்லை. என் கணவர்தான் மின்கம்பம் ஏற சொல்லித் தந்தார். அதனாலதான் உடற்தகுதி தேர்வுல வெற்றிபெற முடிந்சது. நான் ஏறினப்ப எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிடுது.
எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் எழுத்துத் தேர்வு மட்டும்தான் பாக்கி. அதுல நிச்சயம் ஜெயிச்சு என்னை மாதிரி கிராமப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமா ஆவேன் என்று தம்ஸ்அப் காட்டுகிறார் லதா. இவர் வெற்றி பெற்று நியமிக்கப்பட்டாரா என தெரியவில்லை.
Comments